என் மலர்
செய்திகள்

சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் ரூ.4 கோடி போதைப் பவுடர் கடத்தல்
சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த பயணிகள் விமானத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை பவுடர் கடத்தியதாக ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அதில் செல்ல இருந்த பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்தனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் ஷாஜகானை சோதனை செய்தபோது உள்ளாடையில் சுமார் 4 கிலோ போதை பவுடர் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
அதனை அவர் காண்டத்தில் கட்டி வைத்திருந்தார். போதை பவுடரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 4 கோடியாகும்.
இதையடுத்து அமீர் ஷாஜகானை அதிகாரிகள் கைது செய்து போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் கடத்தி வந்தது எந்த வகையான போதை பவுடர் என்பது தெரியவில்லை. அதனை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அதில் செல்ல இருந்த பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்தனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் ஷாஜகானை சோதனை செய்தபோது உள்ளாடையில் சுமார் 4 கிலோ போதை பவுடர் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
அதனை அவர் காண்டத்தில் கட்டி வைத்திருந்தார். போதை பவுடரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 4 கோடியாகும்.
இதையடுத்து அமீர் ஷாஜகானை அதிகாரிகள் கைது செய்து போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் கடத்தி வந்தது எந்த வகையான போதை பவுடர் என்பது தெரியவில்லை. அதனை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
Next Story






