என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் ரூ.4 கோடி போதைப் பவுடர் கடத்தல்
    X

    சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் ரூ.4 கோடி போதைப் பவுடர் கடத்தல்

    சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த பயணிகள் விமானத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை பவுடர் கடத்தியதாக ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    அதில் செல்ல இருந்த பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்தனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் ஷாஜகானை சோதனை செய்தபோது உள்ளாடையில் சுமார் 4 கிலோ போதை பவுடர் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

    அதனை அவர் காண்டத்தில் கட்டி வைத்திருந்தார். போதை பவுடரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 4 கோடியாகும்.

    இதையடுத்து அமீர் ஷாஜகானை அதிகாரிகள் கைது செய்து போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் கடத்தி வந்தது எந்த வகையான போதை பவுடர் என்பது தெரியவில்லை. அதனை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
    Next Story
    ×