என் மலர்
செய்திகள்

கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க மனைவியுடன் வந்த சிவலிங்கம்.
கந்து வட்டி கேட்டு கொடுமை: கலெக்டர் அலுவலகத்துக்கு விஷப்பாட்டிலுடன் வந்த தொழிலாளி
கந்து வட்டி கொடுமையால் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு விஷப்பாட்டிலுடன் தொழிலாளி மனைவியுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுக்க வந்திருந்தனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து அனைத்து கலெக்டர் அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கடலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவலிங்கம் (வயது 58) என்பவர் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவருடன் அவரது மனைவி தவமணி (45) என்பவரும் வந்திருந்தார்.
சிவலிங்கம் தனது கையில் ஒரு பை வைத்திருந்தார். போலீசார் சோதனை செய்தபோது அதில் விஷப்பாட்டில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் கணவன்- மனைவி 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கந்து வட்டி கொடுமை தாங்காமல் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கலெக்டரிடம் கொடுக்க அவர் தான் கொண்டு வந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த 10.5.2011-ம் ஆண்டு எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடனாக வாங்கி இருந்தேன். அதற்கு வட்டிப்பணம் செலுத்தி வந்தேன்.
ஆனால், அவர் வட்டிப் பணத்துக்கு எனது நிலத்தை எழுதி வாங்கி கொண்டார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, அசலும், வட்டியும் சேர்த்து ரூ.3½ லட்சம் கொடுத்தால்தான் நிலத்தை கொடுப்பேன் என்றார்.
இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தேன். ஆனால், போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி எனது நிலத்துக்கு சென்றேன். அப்போது பணம் கொடுத்தவர், நிலம் பக்கம் நீங்கள் வரக்கூடாது. வட்டி பணத்தை தந்தால்தான் நிலப்பத்திரத்தை தருவேன் என்றும், இல்லாவிட்டால் குடும்பத்தோடு தீ வைத்து எரித்து விடுவதாகவும் மிரட்டினார்.
எனவே, கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
போலீசார் சிவலிங்கத்திடம் விசாரணை நடத்திய பிறகு கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர்.
கந்து வட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்துக்கு விஷப்பாட்டிலுடன் தொழிலாளி மனைவியுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுக்க வந்திருந்தனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து அனைத்து கலெக்டர் அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கடலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவலிங்கம் (வயது 58) என்பவர் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவருடன் அவரது மனைவி தவமணி (45) என்பவரும் வந்திருந்தார்.
சிவலிங்கம் தனது கையில் ஒரு பை வைத்திருந்தார். போலீசார் சோதனை செய்தபோது அதில் விஷப்பாட்டில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் கணவன்- மனைவி 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கந்து வட்டி கொடுமை தாங்காமல் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கலெக்டரிடம் கொடுக்க அவர் தான் கொண்டு வந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த 10.5.2011-ம் ஆண்டு எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடனாக வாங்கி இருந்தேன். அதற்கு வட்டிப்பணம் செலுத்தி வந்தேன்.
ஆனால், அவர் வட்டிப் பணத்துக்கு எனது நிலத்தை எழுதி வாங்கி கொண்டார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, அசலும், வட்டியும் சேர்த்து ரூ.3½ லட்சம் கொடுத்தால்தான் நிலத்தை கொடுப்பேன் என்றார்.
இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தேன். ஆனால், போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி எனது நிலத்துக்கு சென்றேன். அப்போது பணம் கொடுத்தவர், நிலம் பக்கம் நீங்கள் வரக்கூடாது. வட்டி பணத்தை தந்தால்தான் நிலப்பத்திரத்தை தருவேன் என்றும், இல்லாவிட்டால் குடும்பத்தோடு தீ வைத்து எரித்து விடுவதாகவும் மிரட்டினார்.
எனவே, கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
போலீசார் சிவலிங்கத்திடம் விசாரணை நடத்திய பிறகு கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர்.
கந்து வட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்துக்கு விஷப்பாட்டிலுடன் தொழிலாளி மனைவியுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






