என் மலர்
செய்திகள்

சிவகங்கை அருகே விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே உள்ளது பொன்னடிபட்டி கிராமம். இங்குள்ள மெயின் ரோட்டில் விநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிக் கொண்டு தப்பினர்.
மறுநாள் காலை கோவில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் உலகம்பட்டி போலீசாருக்கும், கோவில் நிர்வா கத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கோவில் அறங்காவலர் பழனிவேல் போலீசில் கொடுத்துள்ள புகாரில் உண்டியல் பணம் 20 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






