என் மலர்
செய்திகள்

தாம்பரத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக தமிழிசை ஆர்ப்பாட்டம்
தாம்பரம்:
நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தும், நீட்தேர்வுக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகளை கண்டித்தும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாம்பரம் சண்முகம் சாலையில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. எந்த போராட்டம் நட்த்தினாலும் அதற்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் மாற்று சக்தியாக தி.மு.க. இருக்க முடியாது. நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கலைஞர் உடல் நலத்துடன் அரசியலில் ஈடுபட்டு இருந்தால் மாணவர்களின் நலன் கருதி அவர் கண்டிப்பாக நீட் தேர்வை ஆதரித்து இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மோகன் ராஜா, தாம்பரம் தொகுதி பொறுப்பாளர் பொற்றாமரை சங்கரன்,மாநில இளைஞரணி துணைத்தலைவர் குமார், பிற மாநில பிரிவு செயலாளர் அசோக்ஜெயின், முத்துக்குமார், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தண்டையார்பேட்டை மேம்பாலம் அருகே வட சென்னை மாவட்ட பா.ஜனதா சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், தேசிய செயற்குழு உறுப்பினர் வேதா. சுப்பிரமணியன், கோபிகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் நடராஜன், வன்னியராஜன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
செங்குன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், மாவட்ட செயலாளர்கள் சிவா, செந்தில்குமார், துணைத் தலைவர் சசிதரன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






