என் மலர்tooltip icon

    செய்திகள்

    குருசாமி
    X
    குருசாமி

    தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய கணவன்

    கோபி அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள பா.நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 39).

    இவரது மனைவி புஷ்பா (36). இவர் லாரியில் செங்கல் ஏற்றும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு ரமேஷ் (14) என்ற மகனும், தாமரை செல்வி (12) என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த 25-ந் தேதி புஷ்பா வீட்டில் பிணமாக கிடந்தார். அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கோபி அருகே உள்ள வீரபாண்டி கிராம நிர்வாக அதிகாரி நடராஜனிடம் புஷ்பாவின் கணவர் குருசாமி சரண் அடைந்தார்.

    அவர் தனது மனைவி தற்கொலை செய்யவில்லை. நான்தான் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து குருசாமி கோபி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் கைது செய்து விசாரித்தார்.

    அப்போது குருசாமி அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கும், புஷ்பாவுக்கும் திருமணமாகி 15 வருடம் ஆகிறது. எங்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்தது. எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். எனவே நாங்கள் பிரிந்து வாழ்ந்து வந்தோம்.

    ஆனால் பிள்ளைகளின் படிப்பு, வாழ்க்கை கருதி நாங்கள் சேர்ந்து வாழ நினைத்தோம். அதன்படி கடந்த 1 வருடமாக சேர்ந்து வாழ்ந்து வந்தோம். புஷ்பா லாரியில் செங்கல் ஏற்றும் தொழிலுக்கு சென்று வந்தார்.

    அவளுக்கு அடிக்கடி போன் வரும். பலரிடம் அவள் போனில் பேசுவாள். இது அவள் மீது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவளிடம் நான் கேட்பேன். இதனால் எங்களுக்குள் தகராறு வரும்.

    கடந்த 24-ந் தேதி இரவு அவளுக்கு போன் வந்தது. அவள் பேசிவிட்டு, ‘என்னை லாரி டிரைவர் அழைக்கிறார். நான் வேலைக்கு செல்ல வேண்டும்’ என்று கூறினாள். நான் போகக்கூடாது என்று கூறினேன். இதனால் எங்களுக்குள் சண்டை எழுந்தது.

    எனவே அவள் போகவில்லை. படுத்து தூங்கி விட்டாள். மறுநாள் (25-ந் தேதி) காலையில் அவள் சமைக்க எழும்பவில்லை. நான் மகனையும், மகளையும் எனது தந்தை வீட்டில் கொண்டு விட்டேன்.

    பின்னர் வீட்டுக்கு வந்தேன். அப்போதும் புஷ்பா எழுந்திருக்கவில்லை. தூங்கி கொண்டு இருந்தாள். ஏற்கனவே அவள் மீது கடும் கோபத்தில் இருந்த நான் தூங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து மேலும் ஆத்திரம் அடைந்தேன்.

    அந்த ஆத்திரம் அவளை கொலை செய்யும் முடிவுக்கு என்னை கொண்டு வந்தது. அவள் அணிந்திருந்த சேலையால் கழுத்தை நெரித்தேன். இதில் அவள் இறந்தாள். கொலையை மறைக்க முடிவு செய்தேன்.

    எனவே அக்கம் பக்கத்தினரிடம், ‘‘எனது மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். நான் பிணத்தை கீழே இறக்கி வைத்தேன்’’ என்று கூறி நாடகமாடினேன். அவர்களுக்கு என் மீது சந்தேகம் ஏற்படாத வகையில் நடந்து கொண்டேன்.

    போலீசாரும் வந்து பிணத்தை கைப்பற்றி தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் கொலையை மறைத்துவிட்டு எப்படி வாழ்வது? என்று எனது மனசாட்சி என்னை இருக்க விடவில்லை.

    போலீசாரும் விசாரணை நடத்தி என்னை நெருங்கி வருவதுபோல் நான் உணர்ந்தேன். எனவேதான் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு குருசாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

    Next Story
    ×