என் மலர்
செய்திகள்

கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் சூறாவளிகாற்றுடன் பலத்த மழை
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் அக்கினிநட்சத்திரம் முடிவடைந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தபோதும், கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேகம் கறுத்து மழை பெய்யும் சூழ்நிலை இருந்துவந்தது. நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென்று மழை பெய்தது. அப்போது சூறாவளிகாற்றும் வீசியது.
கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, திட்டக்குடி போன்ற பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திட்டக்குடி பகுதியில் சூறாவளிகாற்றுடன் மழைபெய்ததால் கீழசெருவாயில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே இருந்த ஆலமரம் வேரோடு சாய்து விழுந்தது. இதனை பொதுப்பணித்துறை ஊழியர்கள் வெட்டி அகற்றினர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று மாலை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், விக்கிரவாண்டி போன்ற பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணிநேரம் பெய்த இந்த மழையால் ரோடுகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.
பலத்தமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






