என் மலர்
டென்னிஸ்
- ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி வெற்றி பெற்றார்.
லண்டன்:
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, இங்கிலாந்து வீராங்கனை கேடி போல்டருடன் மோதினார்.
இதில் பவுலினி 6-1, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் பெர்லின் ஓபன் சாம்பியனான பெகுலா தோல்வி அடைந்தார்.
லண்டன்:
ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இங்கிலாந்தின் எம்மா ராடுகானுவை சந்தித்தார்.
இதில் எம்மா ரானுகாடு 4-6, 7-6 (8-6), 7-5 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜெசிகா பெகுலா சமீபத்தில் நடந்த பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி கடும் போராட்டத்திற்குப் பிறகு 6(21)- 7(23) என இழந்தது.
- 2-வது செட்டை 4-6 என இழந்து தோல்வியை தழுவியது.
ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அல்பனோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடி காலிறுதியில் அமெரிக்காவின் வித்ரோ- லம்மோன்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.
முதல் செட்டில் இரண்டு ஜோடிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் 6-6 என சமநிலை பெற்ற நிலையில் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரில் மாறிமாறி கேம்ஸை கைப்பற்றினர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு அமெரிக்க ஜோடி 23-21 என தனதாக்கியது. இதனால் முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 6(21)- 7(23) என இழந்தது.
2-வது செட்டை 4-6 என இழக்க நேர்செட்டில் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. மற்றொரு காலிறுதியில் ஜே.கேஷ்- ஆர்.காலோவே ஜோடி 6-1, 6-2 என மார்ட்டினேஸ்- முனார் ஜோடியை வீழ்த்தியது.
- யூகி பாம்ப்ரி ஜோடி ஸ்ரீராம் பாலாஜி ஜோடியை 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வீழ்த்தியது.
- நாளை காலிறுதியில் அமெரிக்க ஜோடியை எதிர்கொள்கிறது.
ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அல்பனோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடி மற்றொரு இந்தியாவின் என். ஸ்ரீராம் பாலாஜி- லூக் ஜான்சன் (இங்கிலாந்து) ஜோடியை எதிர்கொண்டது.
பாம்ப்ரி ஜோடி 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெற இருக்கும் காலிறுதியில் பாம்ப்ரி- ஆலிவெட்டி ஜோடி அமெரிக்காவின் வித்ரோ- லம்மோன்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.
- போக்னினி 7(7)-6(4), 7(7)-6(5) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- ஹிஜிகட்டா 6-2, 2-6, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஸ்பெயின் நாட்டில் மல்கோர்கா சாம்பியன்ஷிப் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ரவுண்ட் ஆஃப் 32-ல் இத்தாலி வீரர ஃபேபியோ ஃபோக்னினி நெர்தலாந்து வீரர் கிஜ்ஸ் பிரவ்வெர்-ஐ எதிர்கொண்டார்.
இதில் போக்னினி 7(7)-6(4), 7(7)-6(5) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டு செட்டும் டை-பிரேக்கர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டா இத்தாலியின் லூகா நர்டியை எதிர்கொண்டார். முதல் செட்டை ஹிஜிகட்டா 6-2 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டில் பதிலடி கொடுத்த நர்டி அந்த செட்டை 6-2 என கைப்பற்றினார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் இருவரும் ஆக்ரோசமாக விளையாடினர். என்றாலும ஹிஜிகட்டாவின் கையே ஓங்கியது. அவர் 7-5 என கடும் போராட்டத்திற்குப்பின் 3-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றி 2-1 என வெற்றி பெற்றார்.
- ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது.
- இன்று நடந்த இறுதியில் இத்தாலி வீரர் சின்னர் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
பெர்லின்:
ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், போலந்து வீரர் ஹர்காக்சை சந்தித்தார்.
இதில் சின்னர் 7-6 (10-8), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
தரவரிசையில் முதலிடம் பெற்ற பிறகு வென்ற முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது.
- இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை காலின்ஸ்கயா தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.
இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை காலின்ஸ்கயா 7-6 (7-0) என கைப்பற்றினார். 2வது செட்டை பெகுலா 6-4 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை பெகுலா 7-6 (7-3) என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஜெசிகா பெகுலா பெறும் 5-வது சாம்பியன் பட்டம் இது என்பதும், இந்த ஆண்டில் இது முதல் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிக்கா பெகுலாவை சந்தித்தார்.
இதில் கோகோ காப் 5-7, 6-7 (7-2) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.
இதன்மூலம் ஜெசிக்கா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் பெகுலா, ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவை சந்திக்கிறார்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா உடன் மோதினார்.
இதில் காலின்ஸ்கயா முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். 2வது செட்டை அசரென்கா 7-6 (7-3) என போராடி வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை காலின்ஸ்கயா 6-1 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- அரையிறுதியில் இத்தாலி வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.
பெர்லின்:
ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், சீன வீரர் ஜிஜெங் உடன் மோதினார்.
இதில் சின்னர் 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிபோட்டியில் போலந்து வீரர் ஹர்காக்சை சந்திக்கிறார்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், துனீசியாவின் ஒன்ஸ் ஜபேரு டன் மோதினார்.
இதில் கோகோ காப் முதல் செட்டை 7-6 (11-9) என கைப்பற்றினார். அப்போது ஒன்ஸ் ஜபேர் உடல்நலக் குறைவால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிக்கா பெகுலாவை சந்திக்கிறார்.
- சுமித் நாகல் ஏற்கனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளார்.
- ரோகன் போபண்ணா, என் ஸ்ரீராம் பாலாஜி ஆண்டுகள் இரட்டையர் பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்தியாவின் டென்னிஸ் வீரரான சுமித் நாகல், அதிகாரப்பூர்வமாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "நான் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒலிம்பிக்ஸ் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருப்பதால் இது எனக்கு ஒரு மகத்தான தருணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுமித் நாகல் ஏற்கனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளார். தற்போது 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளார்.
ரோகன் போபண்ணா, என் ஸ்ரீராம் பாலாஜி ஆண்டுகள் இரட்டையர் பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். போபண்ணா தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளார். அவர் தனது ஜோடியை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத தொடக்கத்தில் சுமித் நாகல் ஹெய்ல்பிரோன் சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் முதல் 80 இடத்திற்குள் நுழைந்தார். இது தகுதி பெற முக்கிய காரணமாக அமைந்தது.
ஆஸ்திரேலிய ஓபனில் முதன்மை சுற்று போட்டிக்கு தகுதி பெற்றார். 37-வது இடத்தில் இருந்த அலெக்சாண்டர் பப்லிக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.






