என் மலர்
டென்னிஸ்
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை அமெண்டா வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமெண்டா அனிசிமோவா, ரஷிய வீராங்கனை எகடெரினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் அனிசிமோவா அதிரடியாக ஆடி 6-3, 6-3 என எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, லாத்வியாவின் ஒஸ்டாபென்கோ உடன் மோத உள்ளார்.
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரரான மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் ஜேன் லென்னர்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-2 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- முதல் செட்டை 3-6 என இழந்தார்.
- 2-வது செட்டை 1-6 விரைவில் இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
கத்தார் ஓபன் டென்னிஸ் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி போட்டியில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் ஸ்வியாடெக், தரநிலை பெறாத லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவை எதிர்கொண்டார்.
இதில் ஸ்வியாடெக் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓஸ்டாபென்கோ அபாரமாக விளையாடினார். அவரது ஆட்டத்திற்கு ஸ்வியாடெக்கால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இதனால் 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி ஓஸ்டாபென்கோ இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
4 முறை ஏஸ் வரை சென்ற நிலையில் கேம்-ஐ வென்றார் ஓஸ்டாபென்கோ. ஆனால் ஸ்வியாடெக் ஒரேயொரு முறைதான் ஏஸ் வரை சென்ற நிலையில் கேம்-ஐ வென்றார். 10-ல் ஐந்து முறை பிரேக் பாயிண்ட்ஸ் பெற்றார் ஓஸ்டாபென்கோ. அதேவேளையில் ஸ்வியாடெக் 3-ல் ஒருமுறைதான் பிரோக் பாயிண்ட் பெற்றார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 2-ம் இடம் பிடித்தவரும், போலந்து வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 7-5 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரரான மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், பிரான்சின் ஹெர்பர்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-4 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தரவரிசையில் 6-ம் இடம் பிடித்தவரும், அமெரிக்க வீராங்கனையுமான ஜெசிகா பெகுலா, ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் 4-6 என முதல் செட்டை இழந்த அலெக்சாண்ட்ரோவா அடுத்த இரு செட்களை 6-1, 6-1 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் தரவரிசையில் 2-ம் இடம் பிடித்தவரும், போலந்து வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-7 (1-7) என இழந்த ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா 7-6 (7-1) 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோவாகியா வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் எலினா ரிபாகினா, இகா ஸ்வியாடெக்குடன் மோத உள்ளார்.
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரரான கரன் கச்சனாவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த கரன் கச்சனாவ், செர்பியாவின் மெத்ஜெடோவிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்ஜெடோவிக் 6-2, 6-3 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீரரான ரஷியாவின் கரன் கச்சனாவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீராங்கனை படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் தரவரிசையில் 9-ம் இடம் பிடித்தவரும், ஸ்பெயின் வீராங்கனையுமான பவுலா படோசா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அனிசிமோவா 6-4, 6-3 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் பவுலா படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- கோகோ காப்- மார்டா ஒலேஹிவ்னா கோஸ்ட்யுக் ஆகியோர் மோதினர்.
- முதல் செட்டை மார்டா எளிதாக வென்றார்.
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் மற்றும் உக்ரைன் வீராங்கனையான மார்டா கோஸ்ட்யுக் ஆகியோர் மோதினர்.
இதில் முதல் செட்டை மார்டா எளிதாக வென்றார். இதனையடுத்து 2-வது செட் பரபரப்பாக சென்றது. இதிலும் மார்டோ 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் 2-6, 5-7 என்ற கணக்கில் கோகோ காப் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தார்.
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நெதர்லாந்தின் மிடில்கூப் ஜோடி, அமெரிக்காவின் பாட்ரிக்-நெதர்லாந்தின் டேவிட் பெல் உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 5-7 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி, அடுத்த இரு செட்களை 6-2, 10-6 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் முதல் சுற்றில் நம்பர் 5 வீரரான அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 5 வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த செபாஸ்டியன் கோர்டா, பின்லாந்தின் ஓட்டோ விர்டானென் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-6 (7-3) என செபாஸ்டியன் கோர்டா வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஓட்டோ விர்டானென் அடுத்த இரு செட்களை 7-6 (7-4), 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 5 வீரரான செபாஸ்டியன் கோர்டா தொடரில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.






