என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் அலெக்ஸ் டி மினார்
    X

    பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் அலெக்ஸ் டி மினார்

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆஸ்திரேலிய வீரர் டி மினார் காலிறுதிக்கு முன்னேறினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், பிரிட்டனின் ஜேக்கப் பெர்ன்லி உடன் மோதினார்.

    இதில் டி மினார் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் காலிறுதியில் டி மினார், கார்லோஸ் அல்காரசை சந்திக்கிறார்.

    Next Story
    ×