என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விஜய் ஹசாரே தொடர்: ரோகித் ரசிகர்களுக்கு அனுமதி... கோலி ரசிகர்களுக்கு மறுப்பு
    X

    விஜய் ஹசாரே தொடர்: ரோகித் ரசிகர்களுக்கு அனுமதி... கோலி ரசிகர்களுக்கு மறுப்பு

    • மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடுகிறார்.
    • டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார்.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நாளை முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாட உள்ளனர்.

    இந்த தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 2 அல்லது 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். இதனால் அவர்கள் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனால் அவர்கள் விளையாடும் போட்டிகளில் அதிக அளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தொடரின் ஒரு லீக் போட்டியில் மும்பை - சிக்கீம் அணிகள் நாளை மோதுகிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ரோகித் சர்மா மும்பை அணியில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

    அதேசமயம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் விஜய் ஹசாரே போட்டியில் விராட் கோலி பங்கேற்கிறார். விராட் கோலியை காண ரசிகர்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க, மைதானத்திற்குள் ரசிகர்களை அனுமதிக்க கூடாது என கர்நாடக அரசு அம்மாநில கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கோலி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×