என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வீடியோ: 7 மாதங்களுக்கு பிறகு களம் காணும் ரோகித், கோலி- ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
    X

    வீடியோ: 7 மாதங்களுக்கு பிறகு களம் காணும் ரோகித், கோலி- ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி

    • முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
    • ஒருநாள் தொடரின் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இதனை தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஒருநாள் தொடரின் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.

    7 மாதங்களுக்கு பிறகு இருவரும் களம் காணுவதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால், பிரஷித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜூரல், நிதிஷ் குமார், ஹர்ஷித் ராணா ஆகியோர் புறப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×