என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    500வது சர்வதேச போட்டியில் விளையாடும் 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ரோகித் சர்மா
    X

    500வது சர்வதேச போட்டியில் விளையாடும் 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ரோகித் சர்மா

    • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.
    • ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆடிய சீனியர் வீரரான ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    இந்த போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா, 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் 5ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    Next Story
    ×