என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இது நம்பமுடியாதது: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குறித்து ராசா நெகிழ்ச்சி
- ஆஸ்திரேலியா தரப்பில் மேட் ரென்ஷா 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் என ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மிகவும் மகிழ்ச்சியாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் பெருமையாகவும் இருக்கிறது. தம்பிகள் சேர்ந்து சாதித்ததை பார்க்கும் ஒரு அண்ணனை போல உணர்கிறேன்.
நீண்ட காலமாக நாங்கள் உருவாக்கி வந்த ஒற்றுமையை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருந்தது. வெளியில் இருந்து பார்ப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது, அதற்கு மேல், ஒரு வெற்றி. இது நம்பமுடியாதது.
நாங்கள் வந்த விதம், பந்து வீசிய விதம், நாங்கள் தொடங்கிய விதம், ஒவ்வொரு கேட்சை எடுத்த விதம், சில பவுண்டரி தடுத்தது. இது நம்பமுடியாதது. அதாவது, சிறுவர்களைக் குறை சொல்ல எந்த காரணமும் இல்லை. அவர்கள் இன்று வெற்றி பெறத் தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டோம் என்பதற்காக நிதானத்தை இழக்காமல், ஒவ்வொரு போட்டியாகக் கவனம் செலுத்தி முன்னேறுவோம். தனக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு கவலைப்படத்தக்கது அல்ல. ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என கூறினார்.






