என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

CSK அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ரெய்னா நியமனம்? - CEO காசி விஸ்வநாதன் விளக்கம்
- ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- முதல் போட்டியில் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.
இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை இன்று இரவுக்குள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சிஎஸ்கேவின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளார் என இணையத்தில் தகவல் பரவியது.
இதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன், "சிஎஸ்கேவின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளார் என பரவும் தகவலில் உண்மையில்லை. எங்களது பயிற்சியாளர்கள் குழுவில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.






