என் மலர்
கிரிக்கெட் (Cricket)

விராட் ஓய்வுக்கு கம்பீர் புகழாரம்- வைரல் பதிவு
- கோலியின் தலைமையின் கீழ், இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தது.
- ஓய்வு பெற்றுள்ள விராட் கோலிக்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் விராட் கோலி. இவர் சச்சினை விட பல சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசி சச்சினின் நீண்ட நாள் சாதனையை முறியடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் அறிவித்தார்.
இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார்.
அந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலிக்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில், "சிங்கத்தைப் போன்ற பேரார்வம் கொண்ட ஒரு மனிதன்! உங்களை மிஸ் பண்ணுவேன் சீக்ஸ் …." என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
கோலியின் தலைமையின் கீழ், இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தது. மேலும் 2018-19 சுற்றுப்பயணத்தின் போது ஆஸ்திரேலியாவில் முதல் தொடரையும் வென்றது குறிப்பிடத்தக்கது.






