என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வீடியோ: ரஜினியின் வசனத்தை தமிழில் பேசி FUN செய்த தோனி, சஞ்சு சாம்சன்
- படையப்பா படத்தில் வரும் மாஸ் வசனமான 'என் வழி தனி வழி' என்ற வசனத்தை தோனி தமிழில் கூறினார்.
- சஞ்சு சாம்சனும் பாட்ஷா படத்தில் வரும் 'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி' என்ற வசனத்தை பேசி அசத்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவர் தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இதேபோல சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது சில சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியது.
அதில் குறிப்பாக இருவரும் நடிகர் ரஜினிகாந்தின் பிரபல வசனங்களை பேசி மாஸ் காட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் வரும் மாஸ் வசனமான என் வழி தனி வழி என்ற வசனத்தை தோனி தமிழில் கூறினார். இதற்கு அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதனை தொடர்ந்து சஞ்சு சாம்சனும் பாட்ஷா படத்தில் வரும் நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி என்ற வசனத்தை பேசி அசத்தினார். இருவரும் தமிழில் பேசிய வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






