என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து தென் ஆப்ரிக்கா வீரர் ரபாடா வெளியேற்றம்
Byமாலை மலர்18 Jan 2022 3:55 PM GMT (Updated: 18 Jan 2022 3:55 PM GMT)
ரபாடா தொடர்ந்து விளையாடி வருவதால் வேலைச்சுமை அதிகரித்துள்ளதாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
பார்ல்:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது.
வெள்ளை பந்து போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர் போட்டி) ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவருக்கு பதில் கே.எல் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்நிலையில் நாளை தொடங்கும் ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்ரிக்கா அணியின் முக்கிய வீரரான ககிசோ ரபாடா வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறுகையில், ’ரபாடா தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி வருவதால் அவருக்கு வேலைச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.’ என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X