search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    அடிலெய்டு டெஸ்ட் முடிந்த உடன் விராட் கோலி இந்தியா திரும்புவார்: பிசிசிஐ உறுதி

    அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க இருப்பதால் விராட் கோலி அடிலெய்டு டெஸ்ட் முடிந்த உடன் இந்தியா திரும்புவார் என பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.
    அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க இருப்பதால் விராட் கோலி அடிலெய்டு டெஸ்ட் முடிந்த உடன் இந்தியா திரும்புவார் என பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐபிஎல் போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அப்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் எங்களுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது என்று விராட் கோலி தெரிவித்தார்.

    இதற்கிடையில் இந்திய அணி வரும் 27-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    குழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவி அருகில் இருக்க விரும்பிய விராட் கோலி, கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கு கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியோடு விராட் கோலி இந்தியா திரும்புவார் என பிசிசிஐ உறுதி செய்துள்ளது. இதனால் அவர் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார்.

    மேலும், ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார். ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாடமாட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×