
அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து தவான் உடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். தவான் தொடக்கத்தில் மிகவும் மந்தமாக விளையாடினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் அதிரடியாக உயரவில்லை. ஓவர் செல்ல செல்ல அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.
இந்தியா பவர்பிளே-யான முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. தவான் 66 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 27.1 ஓவரில் 134 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. கேஎல் ராகுல் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய தவான் 74 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 28.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது.

ஆனால் அணியின் ஸ்கோர் 213 ரன்னாக இருக்கும்போது ஜடேஜா ஆட்டமிழந்தார். 25 ரன்னில் ஜடேஜா ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் ரிஷப் பண்ட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 17 ரன்களும், முகமது ஷமி 10 ரன்களும் அடிக்க இந்தியா 49.1 ஓவரில் 255 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் மற்றும் ரிச்சர்ட்சன் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கி விளையாடி வருகிறது.