search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய ஆர்ச்சரை பாராட்டும் சக வீரர்கள்
    X
    விக்கெட் வீழ்த்திய ஆர்ச்சரை பாராட்டும் சக வீரர்கள்

    செஞ்சூரியன் டெஸ்ட் - இரண்டாம் நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 72/4

    செஞ்சூரியனில் நடந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் முடிவில், தென்ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

    செஞ்சூரியன்:

    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் ‘பாக்சிங் டே’ டெஸ்டாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா டி காக் (95), ஹம்சா (39), பிலாண்டர் (35), பிரிட்டோரியஸ் (33) ஆகியோரின் பங்களிப்பால் 284 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    அதன்பின், இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

    ஜோ டென்லி தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களும், ஜோ ரூட் 29 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி இங்கிலாந்து 181 ரன்னில் சுருண்டது.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பிலாண்டர் 4, விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும், அன்ரிச் நார்ஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 103 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அவுட்டாகினர்.

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2ஒ ஓவரில் 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. வான் டெர் உசைன் 17 ரன்னும், அன்ரிச் நார்ஜ் 4 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில், தற்போது 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×