
இந்நிலையில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக கருதப்பட்டு வரும் விராட் கோலியையும் சீண்டியுள்ளார்.
விராட் கோலி குறித்து அப்துல் ரசாக் கூறுகையில் ‘‘1922-ல் இருந்து 2007 வரை விளையாடிய வீரர்களிடம் நீங்கள் பேசினால், கிரிக்கெட் என்றால் என்ற என்பதை அவர்கள் கூறுவார்கள். அந்த காலக்கட்டத்தில் உள்ள உலகத்தரம் வாய்ந்த வீரர்களை போன்று தற்போதுள்ளவர்களை பார்க்க முடியாது.

டி20 போட்டி கிரிக்கெட்டை மாற்றிவிட்டது. ஆதிக்கம் செலுத்தும் பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் இல்லை. கிரிக்கெட்டில் இது தற்போது அடிப்படையாகவே ஆகிவிட்டது.
அவர்களுக்கு விராட் கோலி சிறந்த வீரர். அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், சச்சின் தெண்டுல்கருக்கு நிகரான இடத்தை அவருக்கு வழங்க இயலாது. அவர் வேறு வகையைச் சார்ந்தவர்’’ என்றார்.