search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்துல் ரசாக்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை.
    • 9 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் மட்டுமே வென்றது.

    லாகூர்:

    உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. மொத்தம் 9 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் மட்டும் வென்று, 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    சமீபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஷாகித் அப்ரிடி, அப்துல் ரசாக், உமர் குல் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து அப்துல் ரசாக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த ரசாக், யூனிஸ் கான் நல்ல கேப்டனாக இருந்தார். அவர் எனக்கு உத்வேகத்தையும், உறுதியையும் வழங்கினார். இப்போது இங்கு இருக்கும் அனைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குறித்து பேசி வருகிறோம்.

    பாகிஸ்தான் வீரர்களில் பெரும் கோடீஸ்வரராக இருப்பவரும் கோலி கிட்ட நெருங்கவே முடியாது.

    உண்மையில் பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி அவர்களை மெருகூட்டி விளையாட வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் எல்லாம் எங்களுக்கு இல்லை.

    பக்தியுள்ள குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஐஸ்வர்யா ராயை ஒருவர் திருமணம் செய்தால் அது சாத்தியமில்லை என கிண்டலாக கருத்து தெரிவித்தார்.

    அப்துல் ரசாக்கின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனது பெயர் அப்துல் ரசாக். நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் நான் கிரிக்கெட் மற்றும் பயிற்சி பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பேசும்போது நான் ஐஸ்வர்யா ராயின் பெயரை தவறாகப் பயன்படுத்தினாலும் இன்னொரு உதாரணத்தை மேற்கோள் காட்ட விரும்பினேன். அதைச் செய்திருக்கக் கூடாது. நான் அவரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • வாசிம் அக்ரம், மெக்ராத் உடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது
    • பும்ரா சிறந்த பவுலர் இல்லை என ஒருபோதும் நான் சொல்லவில்லை

    இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார். தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் 10 விக்கெட்டிற்கும் அதிகமாக வீழ்த்தியுள்ளார்.

    கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய வேகப்பந்து வீச்சு குழுவை வழி நடத்தி வருகிறார். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் அப்துல் ரசாக். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர், மெக்ராத் உள்ளிட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தவர்.

    இவரிடம், இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து கடந்த 2019-ம் ஆண்டு கேள்வி கேட்கப்பட்டது, டி.வி. நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பும்ரா "பேபி பவுலர்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளார். தற்போது 4 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பையில் பும்ரா சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அப்துல் ரசாக்கிடம், பும்ரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவரை "பேபி பவுலர்" என அழைத்ததை நியாயப்படுத்தினார்.

    இதுகுறித்து அப்துல் ரசாக் கூறியதாவது:-

    கடந்த 2019 பேட்டியின்போது நான் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன். ஆகவே, பும்ரா எனக்கு முன் ஒரு "பேபி பவுலர்". அவரை நான் எளிதாக எதிர்கொண்டு, பந்தை அடித்து துவம்சம் செய்திருப்பேன் என்று கூறினேன்.

    நான் என்னக் கூறினேனோ, அதை தவறான முறையில் விளக்கப்பட்டுள்ளது. என்னிடம் மெக்ராத், வாசிம் அக்ரம், பும்ரா, அக்தர் போன்றோரை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களுக்கு முன் பும்ரா "பேபி பவுலர்" எனத் தெரிவித்தேன்.

    பும்ராவை சிறந்த பந்து வீச்சாளர் இல்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் வாசிம் அக்ரம், மெக்ராத்துடன் தொடர்புப்படுத்தி பாருங்கள். அப்போது நான் சொன்னதில் தவறு உள்ளதா? என்று தெரிவியுங்கள். நான் பாகிஸ்தான் அணிக்கு வரும்போது, வாசிம் அக்ரம் முன் நான்கு எப்போதுமே பேபிதான்.

    இவ்வாறு அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

    ×