என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்கத்தா டெஸ்ட் - வங்காளதேசம் விக்கெட்டுகளை இழந்து திணறல்
Byமாலை மலர்22 Nov 2019 10:00 AM GMT (Updated: 22 Nov 2019 10:10 AM GMT)
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி வங்காளதேசம் அணி விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
கொல்கத்தா:
இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷத்மாம் இஸ்லாம், இம்ருல் கயேஸ் ஆகியோர் களமிறங்கினர்.
இஸ்லாம் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவர் 29 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் சிக்கி வங்காளதேச வீரர்கள் வெளியேறினர்.
இதையடுத்து, வங்காளதேசம் அணி உணவு இடைவேளை வரை 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், மொகமது ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X