என் மலர்
ரியோ ஒலிம்பிக்ஸ்-2016
ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் பெற்றுக் கொடுத்த சாக்சி மாலிக்கிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
இதில் இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் வில்வித்தை, தடகளம், டென் னிஸ், டேபிள் டென் னிஸ், துப்பாக்கி சுடுதல், பேட் மின்டன், குத்துச் சண்டை, மல்யுத்தம், நீச்சல், கோல்ப், ஜிம்னாஸ்டிக், துடுப்பு படகு, ஆக்கி, ஜூடோ, பளு தூக்குதல் ஆகிய 15 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே நாள் தோறும் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா? என்ற ஆவலில் ரசிகர்கள் இருந்தனர். 11-ம் நாள் போட்டி முடிவு வரை பதக்கம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், குத்துச்சண்டை, வில்வித்தை போன்ற விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினர். துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கரம்கர், டென்னிசில் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடியினர் மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டனர்.
இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 12-வது நாளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.
மல்யுத்தப் போட்டியில் வெண்கல பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 58 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் சாக்சி மாலிக் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். பெண் ஒருவர் மூலமே இந்தியாவுக்கு இந்த ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் கிடைத்தது.
சாக்சி மாலிக் தொடக்க சுற்றில் சுவீடனை சேர்ந்த ஜோகன்னா மேடிசனை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் மால்டோவா வீராங்கனை மரியானா செர்டிவாராவை தோற்கடித்தார்.
இந்த ஆட்டம் 5-5 என்ற கணக்கில் சமநிலை பெற்றது. டெக்னிக்கல் புள்ளி முறையில் அவர் வென்றார். ஆனால் சாக்சி காலிறுதியில் 2-9 என்ற கணக்கில் ரஷியாவை சேர்ந்த வெலேரியா கோப்லோவாவிடம் தோற்றார். தோல்வியை தழுவினாலும், வெலேரியா பைனலுக்கு முன்னேறியதால் ரீபேஜ் முறையில் சாக்சிக்கு வாய்ப்பு இருந்தது. ரீபேஜ் ரவுண்டில் 12-3 என்ற கணக்கில் ஒர்கான் பியூர்டேஜ்ஜை (மங்கோலியா) தோற்கடித்து வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதை தொடர்ந்து நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சாக்சி மாலிக் கிர்கிஸ்தான் வீராங்கனை அய்சூலு டைனி பெகோவாவை சந்தித்தார். இதில் அவர் 8-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்று வெண்கல பதக்கம் பெற்றார்.
இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் சாக்சி 0-5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். போட்டி முடிய சில நிமிடங்களே இருந்ததால் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சாக்சி மிகவும் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை பெற்றார்.
முதலில் 5-5 என்ற சமநிலையை பெற்றார். போட்டி முடிய சில வினாடிகள் இருந்தபோது சாக்சி அபாரமாக செயல்பட்டு மேலும் 3 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்று இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்டார். தோல்வி நிலையில் இருந்து மீண்டு திறமையுடன் செயல்பட்டு சாக்சி பதக்கம் பெற்றுக் கொடுத்து புதிய வரலாறு படைத்தார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 4-வது இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் ஆவார். இதற்கு முன்பு கர்ணம் மல்லேஸ்வரி (பளு தூக்குதல், 2000), மேரி கோம் (குத்துச்சண்டை, 2012), சாய்னா நேவால் (பேட்மின்டன், 2012) ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்று இருந்தனர்.
மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதற்கு முன்பு மல்யுத்த வீரர்கள் கசாபா யாதவ், சுசில்குமார், யோகேஷ்வர் தத் ஆகியோர் பதக்கம் பெற்றுக்கொடுத்தனர்.
ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த 5-வது பதக்கம் ஆகும். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் 25-வது பதக்கம் இதுவாகும்.
இந்த வெண்கல பதக்கம் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க பட்டியலில் இடம் பிடித்தது. பதக்க பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது.
சாக்சி மாலிக் ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்றுக்கொடுத்ததன் மூலம் நாடே குதூகலம் அடைந்துள்ளது. 120 கோடி இந்தியர்களுக்கு பெருமை தேடிக்கொடுத்த 23 வயதான அவர் அரியானா மாநிலம் ரோத்தக்கை சேர்ந்தவர்.
2014-ம் ஆண்டு காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளியும், 2015 தோகா ஆசிய விளையாட்டில் வெண்கலமும் பெற்று இருந்தார். தற்போது ஒலிம்பிக் பதக்கம் பெற்றதன் மூலம் அவர் மேலும் ஒரு மைல்கல்லை தொட்டார்.
ரியோ ஒலிம்பிக்கில் பதக்க தாகத்தை தீர்த்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சாக்சிக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிக்கின்றன.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டு மந்திரி கோயல், முன்னாள் மத்திய விளையாட்டு மந்திரி அஜய்மக்கான் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இதில் இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் வில்வித்தை, தடகளம், டென் னிஸ், டேபிள் டென் னிஸ், துப்பாக்கி சுடுதல், பேட் மின்டன், குத்துச் சண்டை, மல்யுத்தம், நீச்சல், கோல்ப், ஜிம்னாஸ்டிக், துடுப்பு படகு, ஆக்கி, ஜூடோ, பளு தூக்குதல் ஆகிய 15 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே நாள் தோறும் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா? என்ற ஆவலில் ரசிகர்கள் இருந்தனர். 11-ம் நாள் போட்டி முடிவு வரை பதக்கம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், குத்துச்சண்டை, வில்வித்தை போன்ற விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினர். துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கரம்கர், டென்னிசில் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடியினர் மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டனர்.
இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 12-வது நாளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.
மல்யுத்தப் போட்டியில் வெண்கல பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 58 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் சாக்சி மாலிக் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். பெண் ஒருவர் மூலமே இந்தியாவுக்கு இந்த ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் கிடைத்தது.
சாக்சி மாலிக் தொடக்க சுற்றில் சுவீடனை சேர்ந்த ஜோகன்னா மேடிசனை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் மால்டோவா வீராங்கனை மரியானா செர்டிவாராவை தோற்கடித்தார்.
இந்த ஆட்டம் 5-5 என்ற கணக்கில் சமநிலை பெற்றது. டெக்னிக்கல் புள்ளி முறையில் அவர் வென்றார். ஆனால் சாக்சி காலிறுதியில் 2-9 என்ற கணக்கில் ரஷியாவை சேர்ந்த வெலேரியா கோப்லோவாவிடம் தோற்றார். தோல்வியை தழுவினாலும், வெலேரியா பைனலுக்கு முன்னேறியதால் ரீபேஜ் முறையில் சாக்சிக்கு வாய்ப்பு இருந்தது. ரீபேஜ் ரவுண்டில் 12-3 என்ற கணக்கில் ஒர்கான் பியூர்டேஜ்ஜை (மங்கோலியா) தோற்கடித்து வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதை தொடர்ந்து நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சாக்சி மாலிக் கிர்கிஸ்தான் வீராங்கனை அய்சூலு டைனி பெகோவாவை சந்தித்தார். இதில் அவர் 8-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்று வெண்கல பதக்கம் பெற்றார்.
இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் சாக்சி 0-5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். போட்டி முடிய சில நிமிடங்களே இருந்ததால் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சாக்சி மிகவும் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை பெற்றார்.
முதலில் 5-5 என்ற சமநிலையை பெற்றார். போட்டி முடிய சில வினாடிகள் இருந்தபோது சாக்சி அபாரமாக செயல்பட்டு மேலும் 3 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்று இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்டார். தோல்வி நிலையில் இருந்து மீண்டு திறமையுடன் செயல்பட்டு சாக்சி பதக்கம் பெற்றுக் கொடுத்து புதிய வரலாறு படைத்தார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 4-வது இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் ஆவார். இதற்கு முன்பு கர்ணம் மல்லேஸ்வரி (பளு தூக்குதல், 2000), மேரி கோம் (குத்துச்சண்டை, 2012), சாய்னா நேவால் (பேட்மின்டன், 2012) ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்று இருந்தனர்.
மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதற்கு முன்பு மல்யுத்த வீரர்கள் கசாபா யாதவ், சுசில்குமார், யோகேஷ்வர் தத் ஆகியோர் பதக்கம் பெற்றுக்கொடுத்தனர்.
ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த 5-வது பதக்கம் ஆகும். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் 25-வது பதக்கம் இதுவாகும்.
இந்த வெண்கல பதக்கம் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க பட்டியலில் இடம் பிடித்தது. பதக்க பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது.
சாக்சி மாலிக் ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்றுக்கொடுத்ததன் மூலம் நாடே குதூகலம் அடைந்துள்ளது. 120 கோடி இந்தியர்களுக்கு பெருமை தேடிக்கொடுத்த 23 வயதான அவர் அரியானா மாநிலம் ரோத்தக்கை சேர்ந்தவர்.
2014-ம் ஆண்டு காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளியும், 2015 தோகா ஆசிய விளையாட்டில் வெண்கலமும் பெற்று இருந்தார். தற்போது ஒலிம்பிக் பதக்கம் பெற்றதன் மூலம் அவர் மேலும் ஒரு மைல்கல்லை தொட்டார்.
ரியோ ஒலிம்பிக்கில் பதக்க தாகத்தை தீர்த்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சாக்சிக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிக்கின்றன.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டு மந்திரி கோயல், முன்னாள் மத்திய விளையாட்டு மந்திரி அஜய்மக்கான் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பிரேசில் வீரர் ராப்சன் கான்சிகாவ் தங்கப் பதக்கம் வென்றார்.
ரியோ டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் ஆண்களுக்கான லைட் வெயிட் (60 கிலோ) பிரிவில் இறுதிப்போட்டியில் பிரேசில் வீரர் ராப்சன் கான்சிகாவ், பிரான்ஸ் வீரர் சோபியன் ஒமிஹாவை சந்தித்தார்.
இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக செயல்பட்ட 27 வயதான ராப்சன் 3-0 என்ற கணக்கில் சோபியன் ஒமிஹாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இந்த ஒலிம்பிக் போட்டியில் பிரேசிலுக்கு கிடைத்த 3-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
நவீன ஒலிம்பிக் வரலாற்றில் குத்துச்சண்டை போட்டியில் பிரேசில் பெற்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு குத்துச்சண்டையில் பிரேசில் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கம் வென்று இருந்தது.
ரியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் ஆண்களுக்கான லைட் வெயிட் (60 கிலோ) பிரிவில் இறுதிப்போட்டியில் பிரேசில் வீரர் ராப்சன் கான்சிகாவ், பிரான்ஸ் வீரர் சோபியன் ஒமிஹாவை சந்தித்தார்.
இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக செயல்பட்ட 27 வயதான ராப்சன் 3-0 என்ற கணக்கில் சோபியன் ஒமிஹாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இந்த ஒலிம்பிக் போட்டியில் பிரேசிலுக்கு கிடைத்த 3-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
நவீன ஒலிம்பிக் வரலாற்றில் குத்துச்சண்டை போட்டியில் பிரேசில் பெற்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு குத்துச்சண்டையில் பிரேசில் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கம் வென்று இருந்தது.
ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத் மற்றும் சாக்சி மாலிக் இருவரும் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினர்.
ரியோ ஒலிம்பிக் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், இன்று பல்வேறு பிரிவுகளில் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற்றன. பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத், சாக்சி மாலிக் இருவரும் தங்களது எடைப்பிரிவு போட்டிகளில் காலிறுதிக்கு தகுதிபெற்றனர். காலிறுதியில் வினேஷ் போகத்துக்கு காயம் ஏற்பட்டதால் பாதியில் விலகியதால் தோல்வியடைந்தார்.
58 கிலோ எடைப்பிரிவினருக்கான காலிறுதியில் சாக்சி மாலிக், ரஷ்யாவின் வேலரியா கோப்லோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் ரஷ்ய வீராங்கனை 9-2 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டியில் சாக்சி தோல்வி அடைந்தபோதிலும், வேலரியா பைனலுக்குச் சென்றால், வெண்கலப் பதக்கத்துக்கான ரெப்பேஜ் சுற்றில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
இதே பிரிவில் மற்ற காலிறுதி ஆட்டங்களில் ஜப்பான் வீராங்கனை கயோரி இக்கோ, அசர்பைஜானின் யூலியா, கிர்கிஸ்தானின் ஐசுலு ஆகியோர் வெற்றி பெற்றனர்.
58 கிலோ எடைப்பிரிவினருக்கான காலிறுதியில் சாக்சி மாலிக், ரஷ்யாவின் வேலரியா கோப்லோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் ரஷ்ய வீராங்கனை 9-2 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டியில் சாக்சி தோல்வி அடைந்தபோதிலும், வேலரியா பைனலுக்குச் சென்றால், வெண்கலப் பதக்கத்துக்கான ரெப்பேஜ் சுற்றில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
இதே பிரிவில் மற்ற காலிறுதி ஆட்டங்களில் ஜப்பான் வீராங்கனை கயோரி இக்கோ, அசர்பைஜானின் யூலியா, கிர்கிஸ்தானின் ஐசுலு ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்சி மாலிக் காலிறுதிக்கு முன்னேறினார். காயத்தால் வினேஷ் போகத் விலகினார்.
ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மல்யுத்தப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் பங்கேற்றனர்.
58 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாக்சி மாலிக், மால்டோவா வீராங்கனை மரியானாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியின் முடிவில் இருவரும் 5-5 என சம நிலையில் இருந்தனர். ஆனால், சரிவிலிருந்து மீண்டு அடுத்தடுத்து 4 புள்ளிகளைப் பெற்றதால் சாக்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காலிறுதியில் ரஷ்யாவின் வேலரியாவை எதிர்கொள்கிறார்.
48 கிலோ எடைப்பிரிவினருக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வினேஷ் போகத், ருமேனியாவின் எமிலியா அலினாவை 11-0 என வீழ்த்தினார். காலிறுதிப் போட்டியில் சீனாவின் சன் யனனுடன் மோதினார். இப்போட்டியின் துவக்கத்தில் சீன வீராங்கனை 2-1 என முன்னிலை பெற்றிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வினேஷ் ஆக்ரோஷமாக மோதினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
எழுந்து நடக்க முடியாமல் வலியால் துடித்த அவர் போட்டியில் இருந்து விலகினார். இதனால் சீன விராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வினேஷ்-க்கு காயம் பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
58 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாக்சி மாலிக், மால்டோவா வீராங்கனை மரியானாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியின் முடிவில் இருவரும் 5-5 என சம நிலையில் இருந்தனர். ஆனால், சரிவிலிருந்து மீண்டு அடுத்தடுத்து 4 புள்ளிகளைப் பெற்றதால் சாக்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காலிறுதியில் ரஷ்யாவின் வேலரியாவை எதிர்கொள்கிறார்.
48 கிலோ எடைப்பிரிவினருக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வினேஷ் போகத், ருமேனியாவின் எமிலியா அலினாவை 11-0 என வீழ்த்தினார். காலிறுதிப் போட்டியில் சீனாவின் சன் யனனுடன் மோதினார். இப்போட்டியின் துவக்கத்தில் சீன வீராங்கனை 2-1 என முன்னிலை பெற்றிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வினேஷ் ஆக்ரோஷமாக மோதினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
எழுந்து நடக்க முடியாமல் வலியால் துடித்த அவர் போட்டியில் இருந்து விலகினார். இதனால் சீன விராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வினேஷ்-க்கு காயம் பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதியில் போராடித் தோல்வியடைந்தார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரரான கிதாம்பி ஸ்ரீகாந்த், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சிறப்பாக விளையாடி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இவர் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சீன வீரர் லின் டானை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் தடுமாறிய ஸ்ரீகாந்த் மிகவும் பின்தங்கினார். தொடர்ந்து 10 கேம்களை கைப்பற்றிய லின் டான், ஒரு கட்டத்தில் 11-1 என முன்னிலை பெற்றார். அதன்பின்னர் சற்று போராடிய ஸ்ரீகாந்த் மேலும் 5 கேம்களை கைப்பற்றியபோதும், முதல் செட்டை 6-21 என இழந்தார். ஆனால், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடி 21-11 என கைப்பற்றினார்.
இதனால் மூன்றாவது செட் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. இதிலும் கடுமையாகப் போராடினார் ஸ்ரீகாந்த். ஆனால், அனுபவ வீரரான லின் டான் அந்த செட்டை 21-18 என வசமாக்கினார். இதனால் 6-21, 21-11, 18-21 என்ற செட்கணக்கில் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்து வெளியேறினார். இதனால். ஆடவர் பேட்மிண்டனில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முடிந்தது.
வெற்றி பெற்ற லின் டான், அரையிறுதியில் மலேசிய வீரர் லீ சாங் வெய்யை எதிர்கொள்கிறார்.
முதல் செட்டில் தடுமாறிய ஸ்ரீகாந்த் மிகவும் பின்தங்கினார். தொடர்ந்து 10 கேம்களை கைப்பற்றிய லின் டான், ஒரு கட்டத்தில் 11-1 என முன்னிலை பெற்றார். அதன்பின்னர் சற்று போராடிய ஸ்ரீகாந்த் மேலும் 5 கேம்களை கைப்பற்றியபோதும், முதல் செட்டை 6-21 என இழந்தார். ஆனால், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடி 21-11 என கைப்பற்றினார்.
இதனால் மூன்றாவது செட் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. இதிலும் கடுமையாகப் போராடினார் ஸ்ரீகாந்த். ஆனால், அனுபவ வீரரான லின் டான் அந்த செட்டை 21-18 என வசமாக்கினார். இதனால் 6-21, 21-11, 18-21 என்ற செட்கணக்கில் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்து வெளியேறினார். இதனால். ஆடவர் பேட்மிண்டனில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முடிந்தது.
வெற்றி பெற்ற லின் டான், அரையிறுதியில் மலேசிய வீரர் லீ சாங் வெய்யை எதிர்கொள்கிறார்.
ஒலிம்பிக் போட்டியில் எதிராளியை கலங்கடித்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், சாதனைப் புள்ளிகளுடன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று பெண்களுக்கான ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ருமேனியாவின் எமிலியா அலினாவை எதிர்கொண்டார்.
துவக்கம் முதலே அபாரமாக விளையாடிய வினேஷ் போகத், எதிராளிக்கு வாய்ப்பே கொடுக்காமல் புள்ளிகளை குவித்தார். இதனால் முதல் பாதியில் 6-0 என முன்னிலை பெற்றார். இரண்டாவது பாதியிலும் அதே பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்த, இறுதியில் 11-0 என வெற்றி பெற்று காலிறுதியை உறுதி செய்தார்.
துவக்கம் முதலே அபாரமாக விளையாடிய வினேஷ் போகத், எதிராளிக்கு வாய்ப்பே கொடுக்காமல் புள்ளிகளை குவித்தார். இதனால் முதல் பாதியில் 6-0 என முன்னிலை பெற்றார். இரண்டாவது பாதியிலும் அதே பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்த, இறுதியில் 11-0 என வெற்றி பெற்று காலிறுதியை உறுதி செய்தார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று பெண்களுக்கான மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன. இதில், 58 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தனது முதல் சுற்றில் சுவீடன் வீராங்கனை ஜோகன்னாவை எதிர்கொண்டார்.
துவக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகன்னா விரைவில் இரண்டு புள்ளிகளை பெற்றார். அதன்பின்னர் சாக்சி பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்ரோஷமாக விளையாடினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. இருப்பினும் சாக்சி மாலிக் லாவகமாக மேலும் 2 புள்ளிகளைப் பெற, 0-4 என முன்னிலை பெற்றார்.
அதன்பின்னர் கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் மனம் தளராமல் விளையாடிய சாக்சி, ஜோகன்னாவுக்கு வாய்ப்பு அளிக்காமல் அடுத்தடுத்து 5 புள்ளிகளைப் பெற்று, 5-4 என வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியை உறுதி செய்யும் இந்த சுற்றில் மால்டோவா வீராங்கனை மரியானாவை எதிர்கொள்கிறார் சாக்சி மாலிக்.
துவக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகன்னா விரைவில் இரண்டு புள்ளிகளை பெற்றார். அதன்பின்னர் சாக்சி பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்ரோஷமாக விளையாடினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. இருப்பினும் சாக்சி மாலிக் லாவகமாக மேலும் 2 புள்ளிகளைப் பெற, 0-4 என முன்னிலை பெற்றார்.
அதன்பின்னர் கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் மனம் தளராமல் விளையாடிய சாக்சி, ஜோகன்னாவுக்கு வாய்ப்பு அளிக்காமல் அடுத்தடுத்து 5 புள்ளிகளைப் பெற்று, 5-4 என வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியை உறுதி செய்யும் இந்த சுற்றில் மால்டோவா வீராங்கனை மரியானாவை எதிர்கொள்கிறார் சாக்சி மாலிக்.
ஒலிம்பிக்கில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக்கில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடைபெற்றது. இதில், 22 வயதான ஜமைக்கா வீரர் ஒமர் மெசிலாட் பந்தய தூரத்தை 13.05 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்காவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது.
ஸ்பெயின் வீரர் ஓர்டேகா 13.17 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கமும், பிரான்சை சேர்ந்த டிமிட்ரி பாஸ்கோவ் 13.24 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
பிரிட்டனின் முன்னணி வீரர்களான ஆண்ட்ரூ போஸி மற்றும் லாரன்ஸ் கிளார்க் ஆகிய இருவரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடைபெற்றது. இதில், 22 வயதான ஜமைக்கா வீரர் ஒமர் மெசிலாட் பந்தய தூரத்தை 13.05 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்காவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது.
ஸ்பெயின் வீரர் ஓர்டேகா 13.17 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கமும், பிரான்சை சேர்ந்த டிமிட்ரி பாஸ்கோவ் 13.24 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
பிரிட்டனின் முன்னணி வீரர்களான ஆண்ட்ரூ போஸி மற்றும் லாரன்ஸ் கிளார்க் ஆகிய இருவரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பளு தூக்கும் போட்டியின் 105 கிலோ உடல் எடைக்கும் மேற்பட்ட பிரிவில் ஜார்ஜியா வீரர் லஷ்கா புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
பளு தூக்கும் போட்டியின் 105 கிலோ உடல் எடைக்கும் மேற்பட்ட பிரிவில் ஜார்ஜியா வீரர் லஷ்கா புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
22 வயதான அவர் ஸ்னாட்ச் முறையில் 215 கிலோவும், கிளின் அன்ட் ஜொக் முறையில் 258 கிலோவும் ஆக மொத்தம் 473 கிலோ தூக்கி சாதனை புரிந்தார். அவர் ஈரான் வீரர் சலமிக்கு அதிர்ச்சி கொடுத்து இந்த சாதனையை படைத்தார்.
ஆர்மேனிய வீரர் மின் சயான் 451 கிலோ தூக்கி வெள்ளி பதக்கமும், மற்றொரு ஜார்ஜிய வீரர் துர்மென்தஷ் 448 கிலோ தூக்கி வெண்கலமும் வென்றனர்.
22 வயதான அவர் ஸ்னாட்ச் முறையில் 215 கிலோவும், கிளின் அன்ட் ஜொக் முறையில் 258 கிலோவும் ஆக மொத்தம் 473 கிலோ தூக்கி சாதனை புரிந்தார். அவர் ஈரான் வீரர் சலமிக்கு அதிர்ச்சி கொடுத்து இந்த சாதனையை படைத்தார்.
ஆர்மேனிய வீரர் மின் சயான் 451 கிலோ தூக்கி வெள்ளி பதக்கமும், மற்றொரு ஜார்ஜிய வீரர் துர்மென்தஷ் 448 கிலோ தூக்கி வெண்கலமும் வென்றனர்.
ஜிம்னாஸ்டிக் ஆர்டிஸ்டிக் பெண்கள் புளோர் பிரிவு போட்டி நேற்று நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை ஷிமோகன் பெல்ஸ் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றார்.
ரியோ டி ஜெனீரோ:
ஜிம்னாஸ்டிக் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஷிமோன் பைல்ஸ் ஆதிக்கம் தொடர்கிறது.
ஜிம்னாஸ்டிக் ஆர்டிஸ்டிக் பெண்கள் புளோர் பிரிவு போட்டி நேற்று நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை ஷிமோகன் பெல்ஸ் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றார். அவர் 15.966 புள்ளிகள் பெற்றார். ஷிமோகன் பைல்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் பெற்ற 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். அவர் ஏற்கனவே ஆல்ரவுண்டு, வால்ட் பிரிவில் தங்கம் வென்று இருந்தார்.

பேலன்ஸ் பீம் பிரிவில் ஷிமோன் பைல்ஸ் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். இதனால் இந்த ஒலிம்பிக்கில் அவருக்கு இதுவரை 5 பதக்கம் கிடைத்துள்ளது.
மற்றொரு அமெரிக்க வீராங்கனை அலை ரெய்சன் (15,500 புள்ளிகள்) வெள்ளி பதக்கமும், இங்கிலாந்து வீராங்கனை அமய் டிங்லெர் (14.933 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் புளோர் பிரிவில் பெற்றனர்.
ஜிம்னாஸ்டிக் அர்டிஸ்டிக் பிரிவில் அமெரிக்கா இதுவரை 12 பதக்கம் பெற்றுள்ளது.
ஜிம்னாஸ்டிக் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஷிமோன் பைல்ஸ் ஆதிக்கம் தொடர்கிறது.
ஜிம்னாஸ்டிக் ஆர்டிஸ்டிக் பெண்கள் புளோர் பிரிவு போட்டி நேற்று நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை ஷிமோகன் பெல்ஸ் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றார். அவர் 15.966 புள்ளிகள் பெற்றார். ஷிமோகன் பைல்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் பெற்ற 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். அவர் ஏற்கனவே ஆல்ரவுண்டு, வால்ட் பிரிவில் தங்கம் வென்று இருந்தார்.

பேலன்ஸ் பீம் பிரிவில் ஷிமோன் பைல்ஸ் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். இதனால் இந்த ஒலிம்பிக்கில் அவருக்கு இதுவரை 5 பதக்கம் கிடைத்துள்ளது.
மற்றொரு அமெரிக்க வீராங்கனை அலை ரெய்சன் (15,500 புள்ளிகள்) வெள்ளி பதக்கமும், இங்கிலாந்து வீராங்கனை அமய் டிங்லெர் (14.933 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் புளோர் பிரிவில் பெற்றனர்.
ஜிம்னாஸ்டிக் அர்டிஸ்டிக் பிரிவில் அமெரிக்கா இதுவரை 12 பதக்கம் பெற்றுள்ளது.
ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டனில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ரியோ டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. இதுவரை 73 நாடுகள் பதக்க பட்டியலில் இணைந்து விட்டன. அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 62 ஒலிம்பிக் சாதனையும், 21 உலக சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் திருவிழா தொடங்கி 11 நாட்கள் ஆகியும் இந்தியாவினால் இன்னும் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
பேட்மிண்டன், தடகளம், மல்யுத்தம் ஆகியவற்றில் மட்டுமே இந்திய வீரர்கள் தற்போது களத்தில் நீடிக்கிறார்கள். இவற்றில் ஏதாவது ஒரு பதக்கம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெக்வால் வெளியேறினார். இருப்பினும் தொடர் சோகத்துக்கு மத்தியில் பேட்மிண்டன் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஆறுதல் அளித்து வருகிறார்.
மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்நாட்டு மக்களுக்கு, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பிவி சிந்து பிரகாசப்படுத்தி உள்ளார். ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையரில் சாய்னாவுக்கு பிறகு கால்இறுதியை எட்டிய 2-வது இந்திய வீராங்கனை சிந்து ஆவார்.
ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் காலிறுதி போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடம் பிடித்தவருமான சீனாவின் வாங் யிகானை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பு நிறைந்த இந்த ஆட்டத்தில் பிவி சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீன வீராங்கனையை வீழ்த்தினார் 2-0 என்ற கணக்கில். சீனா விராங்கனையும் சளைத்தவர் கிடையாது, பிவி சிந்துக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். இருப்பினும் பிவி சிந்து சிறு பிழைகளைச் செய்தாலும், மன உறுதியை இழக்காமல் அபாரம் காட்டினார்.
சுமார் 51 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் சீன வீராங்கனை வாங்யிகானை பந்தாடினார். முதல் செட்டை மகிழ்ச்சியுடன் தொடங்கிய சீன வீராங்கனைக்கு சவால் விடும் அளவிற்கு பி.வி. சிந்து அபாரம் காட்டினார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 13-13, 17-17 என்ற சரிசமான அளவிற்கு இருவரும் புள்ளிக் கணக்கை கொண்டிருந்தனர். பிவி சிந்து 20-18 என்ற கணக்கில் முதல்செட்டில் முன்னிலை பெற்று இருந்த போது சீன வீராங்கனை சளைக்காமல் விளையாடினார். நெருக்கடியான இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை 21-20 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார்.

இரண்டாவது செட் தொடக்கத்திலே ஆட்டத்தை பிவி சிந்து தன் கைவசம் கொண்டுவந்தார், இருப்பினும் அனுபவம் வாய்ந்த சீன வீராங்கனை தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார். ஒருகட்டத்தில் 18-18 என்ற சமநிலையை இருவரும் அடைந்தனர். இருப்பினும் சீன வீராங்கனை வான் யிகான் செய்த ஒவ்வொரு தவறும் சிந்துவின் புள்ளிக்கணக்கை உயரச்செய்தது. 21-19 என்ற கணக்கில் பிவி சிந்து யிகானை தோற்கடித்து, அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார். சீன வீராங்கனை யிகானை தோற்கடித்த பிவி சிந்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அரையிறுதிப்போட்டியில் பி.வி. சிந்து உலக தரவரிசையில் மூன்றாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஒகுகாரா நொஜோமியை சந்திக்கிறார். புதுடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய யூத் 19 வயதுக்குட்பட்டோருக்கான பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, ஜப்பானின் ஒகுகாரா நொஜோமியைத் 18-21, 21-17, 22-20 என்ற கணக்கில் தோற்கடித்தவர்.
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. இதுவரை 73 நாடுகள் பதக்க பட்டியலில் இணைந்து விட்டன. அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 62 ஒலிம்பிக் சாதனையும், 21 உலக சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் திருவிழா தொடங்கி 11 நாட்கள் ஆகியும் இந்தியாவினால் இன்னும் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
பேட்மிண்டன், தடகளம், மல்யுத்தம் ஆகியவற்றில் மட்டுமே இந்திய வீரர்கள் தற்போது களத்தில் நீடிக்கிறார்கள். இவற்றில் ஏதாவது ஒரு பதக்கம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெக்வால் வெளியேறினார். இருப்பினும் தொடர் சோகத்துக்கு மத்தியில் பேட்மிண்டன் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஆறுதல் அளித்து வருகிறார்.
மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்நாட்டு மக்களுக்கு, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பிவி சிந்து பிரகாசப்படுத்தி உள்ளார். ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையரில் சாய்னாவுக்கு பிறகு கால்இறுதியை எட்டிய 2-வது இந்திய வீராங்கனை சிந்து ஆவார்.
ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் காலிறுதி போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடம் பிடித்தவருமான சீனாவின் வாங் யிகானை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பு நிறைந்த இந்த ஆட்டத்தில் பிவி சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீன வீராங்கனையை வீழ்த்தினார் 2-0 என்ற கணக்கில். சீனா விராங்கனையும் சளைத்தவர் கிடையாது, பிவி சிந்துக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். இருப்பினும் பிவி சிந்து சிறு பிழைகளைச் செய்தாலும், மன உறுதியை இழக்காமல் அபாரம் காட்டினார்.
சுமார் 51 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் சீன வீராங்கனை வாங்யிகானை பந்தாடினார். முதல் செட்டை மகிழ்ச்சியுடன் தொடங்கிய சீன வீராங்கனைக்கு சவால் விடும் அளவிற்கு பி.வி. சிந்து அபாரம் காட்டினார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 13-13, 17-17 என்ற சரிசமான அளவிற்கு இருவரும் புள்ளிக் கணக்கை கொண்டிருந்தனர். பிவி சிந்து 20-18 என்ற கணக்கில் முதல்செட்டில் முன்னிலை பெற்று இருந்த போது சீன வீராங்கனை சளைக்காமல் விளையாடினார். நெருக்கடியான இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை 21-20 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார்.

இரண்டாவது செட் தொடக்கத்திலே ஆட்டத்தை பிவி சிந்து தன் கைவசம் கொண்டுவந்தார், இருப்பினும் அனுபவம் வாய்ந்த சீன வீராங்கனை தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார். ஒருகட்டத்தில் 18-18 என்ற சமநிலையை இருவரும் அடைந்தனர். இருப்பினும் சீன வீராங்கனை வான் யிகான் செய்த ஒவ்வொரு தவறும் சிந்துவின் புள்ளிக்கணக்கை உயரச்செய்தது. 21-19 என்ற கணக்கில் பிவி சிந்து யிகானை தோற்கடித்து, அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார். சீன வீராங்கனை யிகானை தோற்கடித்த பிவி சிந்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அரையிறுதிப்போட்டியில் பி.வி. சிந்து உலக தரவரிசையில் மூன்றாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஒகுகாரா நொஜோமியை சந்திக்கிறார். புதுடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய யூத் 19 வயதுக்குட்பட்டோருக்கான பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, ஜப்பானின் ஒகுகாரா நொஜோமியைத் 18-21, 21-17, 22-20 என்ற கணக்கில் தோற்கடித்தவர்.
ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்று போட்டியில் உசேன் போல்ட் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
ரியோ டி ஜெனீரோ :
ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்று நேற்று நடந்தது. இதில் பதற்றமின்றி சர்வ சாதாரணமாக ஓடிய நடப்பு சாம்பியன் உசேன் போல்ட் (ஜமைக்கா) 20.28 வினாடிகளில் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். அவருக்கு சவால் அளிக்கக்கூடிய அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேத்லின், கனடாவின் டி கிராசி ஆகியோரும் அரைஇறுதியை எட்டினார்.
அரைஇறுதி சுற்று இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கும், இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கும் நடக்கிறது.
ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்று நேற்று நடந்தது. இதில் பதற்றமின்றி சர்வ சாதாரணமாக ஓடிய நடப்பு சாம்பியன் உசேன் போல்ட் (ஜமைக்கா) 20.28 வினாடிகளில் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். அவருக்கு சவால் அளிக்கக்கூடிய அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேத்லின், கனடாவின் டி கிராசி ஆகியோரும் அரைஇறுதியை எட்டினார்.
அரைஇறுதி சுற்று இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கும், இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கும் நடக்கிறது.






