புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் பிறந்தநாள் விழா லாஸ்பேட்டை கொல்லி மேடு மைதானத்தில் நடந்தது. இதில் பா.ஜனதா கட்சி மாநில துணை தலைவர் உமா சங்கர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அஸ்வின்குமார், அமல்ராஜ், மாநில செயற் குழு உறுப்பினர் டி.எம்.வருண், இளைஞர் அணி பொது செயலாளர் வேல்முருகன், மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட பிறந்தநாள் விழா நிகழ்ச்சி யில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சாமி நாதனின் 53 வயதை குறிக்கும் வகையில் 53 கிலோ பிரமாண்ட பிறந்த நாள் கேக்கை மேடையில் வெட்டி குடும்பத்தினருடன் கொண்டாடினார். சாமிநாதனுக்கு பா.ஜனதா மாநில துணை செயலாளர் உமா சங்கர் மற்றும்
பா.ஜனதா நிர்வாகிகள் ஆளுயர ரோஜா மாலையை சாமி நாதனுக்கு அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சபா நாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச் சிவாயம், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், விவிலியம் ரிச்சர்ட், வெங்கடேசன், அசோக்பாபு, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், பா.ஜனதா மாநில பட்டியலின அணி தலைவர் தமிழ்மாறன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பா.ஜனதாவை சேர்ந்த பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் சாமி நாதனுக்கு மாலை சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பிறந்த நாள் நிகழ்ச்சியில் சாமிநாதன் பேசியதாவது:-
நாட்டு நலனுக்காக கடந்த 25 ஆண்டுகளாக பா.ஜனதாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். தேர்தலில் தோற்றால் 5 ஆண்டுக்கு பிறகு தான் மறுபடி வருவார் கள். ஆனால் நான் தோற்ற மறுநாளில் இருந்து மக்கள் பணியாற்றி வருகிறேன். முதல் தேர்தலை நான் சந்திக்கும் பொழுது 10 நபர்கள் கூட என் அருகில் இல்லை. யாரெல்லாம் பா.ஜனதாவை சிறுமைப் படுத்தி பேசினார்களோ அவர்களெல்லாம் இன்றைக்கு பா.ஜனதாவில் இணைத்துள் ளனர்.
இந்தியா முழுவதும் 19 மாநிலங்களில் பா.ஜனதா முதல்-அமைச்சர்கள் உள்ளனர். வருகிற 2026 தேர்தலில் புதுவையில்
பா.ஜனதா முழுமையாக ஆட்சி அமைக்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் வலிமையான அமைச்சரை உருவாக்கும் தொகுதியாக லாஸ்பேட்டை தொகுதி இருக்கும். வளர்ச்சி, ஊழலற்ற ஆட்சி என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டு மோடி தலைமையிலான ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் லாஸ்பேட்டையில் நெசவாளர் நகர், சிவானந்த புரம் ஆகிய பகுதிகளில் சாலை அமைக்க அடுத்த மாதம் பூமி பூஜை நடக்க உள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியா காங்கிரஸ் இல்லாத புதுவை இதுவே நம்முடைய லட்சிய பயணம். உங்களுக் காக பணியாற்ற பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களை அவர்களது அலுவலகத்திலும் நீங்கள் சந்தித்து குறைகளை சொல்ல லாம். பா.ஜனதா கட்சி அலுவலகத்திலும் நீங்கள் அவர்களை சந்தித்து மக்கள் பிரச்சினைக்காக பேசலாம்.உங்களுக்காக பணியாற் றுவதற்கு பா.ஜனதா தயாராக உள்ளது இவ்வாறு பேசினார்.