என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை: சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
Byமாலை மலர்20 April 2022 4:14 AM GMT (Updated: 20 April 2022 4:14 AM GMT)
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகையணை கட்ட பொதுப்பணிதுறை தலைமை என்ஜினீயரிடம் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை எதிர்க்கட்சி தலைவர் சிவா பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்யமூர்த்தியை அவரது அலுவலகத்தில் சந்தித்து தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது சுல்தான்பேட்டை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஜெனரேட்டர் அமைத்து மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டிக் கொடுக்க வேண்டும்.
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்ட வேண்டும். வில்லியனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டுவர வேண்டும். வாய்க்கால்களை தூர்வார வேண்டும். ஹைமாஸ் விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற வேண்டும். புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும்.
முருங்கப்பாக்கம் வில்லியனூர் சாலை பணியை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின்போது செயற்பொறியாளர்கள் பாலசுப்ரமணியன், முருகானந்தம், உதவி பொறியாளர்கள் வைத்தியநாதன், சவுந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X