என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விபத்துகள் பெருகி வருகிறது.
    • கடந்த சில தினங்களாக சாலையில் ஏற்படும் விபத்துகளால் உயிர் பலிகளும் அதிகமாகி வருகிறது.

    புதுச்சேரி

    புதுவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விபத்துகள் பெருகி வருகிறது. கடந்த சில தினங்களாக சாலையில் ஏற்படும் விபத்துகளால் உயிர் பலிகளும் அதிகமாகி வருகிறது. பொதுமக்களுக்கு தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பேரணி போக்குவரத்து காவல்துறை அலுவலகம் எதிரே தொடங்கியது. 'போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா. சைதன்யா கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் போக்குவரத்து காவல்துறை போலீசார் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி செஞ்சி சாலை வழியாக எஸ். வி. பட்டேல் சாலை, ஆம்பூர் சாலை வழியாக மீண்டும் போக்குவரத்து காவல்துறை அலுவலகம் வந்து அடைந்தது.

    'இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு. மாறன் கூறியதாவது:-

    கடந்த 4 நாட்களில் சாலை விபத்துகளில் எந்தவித காரணமும் இன்றி சாலையில் விழுந்து 4 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இதுபோன்ற உயிர்பலிகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பேரணி நடத்தியதாகவும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவதையும், காரில் செல்பவர் சீட் பெல்ட் அணிவதையும் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

    • திருக்கனூர் அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அங்கு காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டில் உள்ள கர்மகாரிய கொட்டகையில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன்(வயது32). சரண்ராஜ்(28), அஜித்குமார் என்ற அஜித்(26), பிரவீன்ராஜ்(28) மற்றும் தரணிகுமார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.4 ஆயிரத்து 200 மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • புதிய பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    • இவர் கடந்த 9 மாதத்துக்கு முன்பு முத்தியால்பேட்டையை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்பவரிடமிருந்து ரூ.40 ஆயிரத்துக்கு மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

    புதுச்சேரி:

    புதிய பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    புதுவை நெல்லித்தோப்பு சின்ன கொசப்பாளையத்தை சேர்ந்தவர் பாசு (வயது46). இவர் புதுவை லட்சுமி நகரில் கம்ப்யூட்டர் ஆப்செட் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 9 மாதத்துக்கு முன்பு முத்தியால்பேட்டையை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்பவரிடமிருந்து ரூ.40 ஆயிரத்துக்கு மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

    பாசு தனது உறவினரை பஸ்சில் ஏற்றி விட மோட்டார் சைக்கிளில் அவரை புதிய பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். அங்குள்ள ஓட்டல் அருகே பாசு மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டி விட்டு திருப்பதி செல்லும் பஸ்சில் உறவினரை ஏற்றி வழியனுப்பிவைத்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார்.

    அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து அதனை தள்ளி செல்வதை கண்டு பாசு திருடன் திருடன் அலறல் சத்தம் போட்டார். உடனே அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 பேரையும் பிடிக்க முயன்றனர். அதில் ஒருவன் தப்பியோடி விட்டான். மற்றொருவன் சிக்கிக் கொண்டான். இதையடுத்து பிடிப்பட்ட அவனை பாசு உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே ஆவூர் கிராமத்தை சேர்ந்த முஜிபுல்லா(25) என்பதும், தப்பிஒடியவன் அதே பகுதியை சேர்ந்த காசிம் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் திருபுவனை பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் தங்கி சப்ளையராக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் மீது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே திருட்டு மற்றும் கொலை வழக்கும் உள்ளது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து முஜிபுல்லாவை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய காசிமை தேடி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1-ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்துவது நடைமுறையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் புதுவை அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புதுவை அரசின் நிதித்துறை சார்பு செயலர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1-ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், இந்த அகவிலைப்படி உயர்வு அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களுக்கும் பொருந்துமா என அறிவிக்கப்படவில்லை.

    இது தொடர்பாக தனியாக அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு மூலம், மாநிலத்தில் உள்ள 21 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைய உள்ளனர். இதனால் அர சுக்கு ஆண்டிற்கு ரூ.54 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுவையில் நடைபாதை வியாபாரிகள் பலர் நடை பாதைகளில் காய்கறி, பழம், துணிமணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
    • இந்த நிலையில், புதுவை அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நடைபாதை வியாபாரிகள் பலர் நடை பாதைகளில் காய்கறி, பழம், துணிமணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனிடையே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், புதுவை அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    இதனால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகள் சி.ஐ.டி.யூ. தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனிவாசன், சாலையோர சங்க நிர்வாகிகள் வடிவேலு, துரியன், வீரமணி, அழகுராஜ் உள்ளிட்டோர் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் சென்று அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அப்போது அவர்கள் பண்டிகை காலங்களில் இதுபோல நடைபாதை கடைகளை அகற்றினால் அவர்களது வாழ்வாதாரம் என்ன ஆகும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்து தந்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றமாறு வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் புதுவையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கடலூர் சாலை முதலியார் பேட்டை கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்க்கு சிறு குறு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுவை மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மற்றும் தொடர் மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து புதுவை அரசு பொதுப்பணித்துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரப்பாலத்தில் இருந்து முள்ளோடை வரை புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    முதல் கட்டமாக இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு பக்கத்திலும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இயந்திர உதவியோடு செய்து வந்தனர்.

    ஆனால் பெயரில் மட்டுமே இந்த ஆக்கிரமிப்பு ஆகற்றும் பணி நடைபெற்றது. விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர் மட்டுமே தற்காலிகமாக அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்பு அதே நிலையில் காணப்படுகிறது.

    சாலை நடுவே தடுப்புகள் அமைத்ததால் இருவழி சாலையாக உள்ளது. சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருக்கும் இடங்களில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

    எனவே புதிய தார் சாலை போடுவதற்கு முன்பாக சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • புதுவை மாநில வளர்ச்சிக்காக கடந்த ஓராண்டில் செய்த பணிகளை செல்வகணபதி எம்.பி. பட்டியலிட்டுள்ளார்.
    • கடந்த ஓராண்டில் புற்று நோய், இருதய நோய், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பெற்று தரப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில வளர்ச்சிக்காக கடந்த ஓராண்டில் செய்த பணிகளை செல்வகணபதி எம்.பி. பட்டியலிட்டுள்ளார்.

    புதுவை எம்.பி. செல்வகணபதி கடந்த ஓராண்டில் ஆற்றிய பணிகளை விளக்கி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவாது:-

    நாடாளுமன்ற கூட்டத்தில் 58 நாட்கள் (93 சதவீதம்) பங்கேற்று 99 வினாக்களை எழுப்பியுள்ளார். அப்போது மாநிலத்துக்கு கூடுதல் நிதி தேவை, பல்கலைக்கழகத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு, மத்திய அரசு நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை, புதுவைக்கு 3-வது கேந்திரிய வித்தியாலயா பள்ளி, விமானதள விரிவாக்கம், காரைக்காலில் விமான தளம், சரக்கு கப்பல் போக்கு வரத்தை தொடங்குவது, காட்டுநாயக்கன், எருக்குலா, மலைக்குறவன், குறும்பன் ஆகிய 4 பழங்குடி சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தொடர் முயற்சி எடுக்கப்பட்டது.

    கடந்த ஓராண்டில் புற்று நோய், இருதய நோய், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பெற்று தரப்பட்டது. பிள்ளைச்சாவடியில் மாற்றுதிறனாளிகள் செயல் கருவி தொழிற்சாலையை ரூ.30 கோடியில் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. 2017 வரை மருத்துவம் சார்ந்த பட்டயம் படித்த இளநிலை மருத்துவர்கள் மருத்துவ கல்லூரிகளில் பணியில் தொடர மருத்துவ பட்ட மேற்படிப்பு வாரிய தலைவருக்கு விளக்கி சாதகமான தீர்வு காணப்பட்டது.

    ரோடியர் மில் தொழிலாளர்களின் வைப்பு நிதி ரூ.3 கோடியே 13 லட்சத்தை விடு வித்து அவர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. உப்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினையான 10 மடங்கு உயர்த்தப்பட்ட இட அனுமதி தொகையை குறைக்க வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    புதுவை ரெயில் நிலைய வசதிகளை உலக தரத்துக்கு மேம்படுத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திண்டிவனம்-புதுவை-கடலூர் ரெயில் பாதை அமைப்புக்கு புத்துயிர்கொடுத்தல், வில்லியனூர் ரெயில் நிலைய பராமரிப்பை மேம்படுத்துதல், சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை புதுவை வரை நீட்டித்தல், காரைக்கால்-பேரளம் ரெயில்பாதை வேலையை துரிதப்படுத்த வலியுறுத்தப்பட்டது.

    புதுவையில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்க மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூவிடம் வலியுறுத்தி ஒப்புதல் பெறப்பட்டு ள்ளது. காமராஜர் வேளாண் விஞ்ஞான மைய ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை களை அமல்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.

    மாற்று திறனாளிகள் 100 பேருக்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 3 சக்கர வாகனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 175 பேருக்கு காதுகேட்கும் கருவி வழங்க தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சுதந்திர அமுத பெருவிழாவையொட்டி 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் ரூ.17 லட்சம் மதிப்பில் சொந்த செலவில் நடத்தப்பட்டது. முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்ட 150 பயனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற பரிந்துரைக்கப்பட்டது. மேலும் ஜிப்மர் நிர்வாகத்திடம் பேசி நோயாளிகளுக்கு அனைத்து மருந்துகளும் தடங்கல் இல்லாமல் வழங்க தொடர் முயற்சி எடுத்து வருகிறார்.

    இதுவரை சாலை மேம்பாட்டு பணிக்காக ரூ.1 கோடியே 37 லட்சம், மின் சிக்கன விளக்குகளுக்கான ரூ.25 லட்சத்து 80 ஆயிரம், மின்பிடிதுறைமுக முகத்து வாரம் ஆழப்படுத்த ரூ.10 லட்சம், சட்டக்கல்லூரிக்கு பஸ் வாங்க ரூ.24 லட்சத்து 63 ஆயிரம், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் வாங்க ரூ.42 லட்சத்து 44 ஆயிரம், கதிர்காமம், நெல்லித்தோப்பு தொகுதிகளில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட ரூ.61 லட்சம் வழங்கியுள்ளார்.

    விலங்குகளுக்காக ஆம்புலன்சு வாங்க ரூ.5 லட்சத்து 93 ஆயிரம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு ஜே.சி.பி. வாங்கிட ரூ.35 லட்சத்து 50 ஆயிரம், காரைக்கால் நல்லம்பல் ஏரியை ஆழப்படுத்த ரூ.53 லட்சத்து 80 ஆயிரம், 175 பேருக்கு காதுகேட்கும் கருவி வாங்க ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கியுள்ளார். ஒட்டுமொத்தமாக ரூ.4 கோடியே 4 லட்சத்து 92 ஆயிரம் தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவை ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரவி என்ற ரவிச்சந்திரன் தலைமையில் மீனவ பெண்கள், இளைஞர்கள் சுமார் 50-க்கு மேற்பட்டவர்கள் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர்.
    • இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட தேவையான பேட், பந்து உள்ளிட்ட உபகரணங்களை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரவி என்ற ரவிச்சந்திரன் தலைமையில் மீனவ பெண்கள், இளைஞர்கள் சுமார் 50-க்கு மேற்பட்டவர்கள் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர். தொடர்ந்து வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட தேவையான பேட், பந்து உள்ளிட்ட உபகரணங்களை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா தலைவர் நாகராஜன், நிர்வாகிகள் பாண்டியன், கதிரவன், முத்துக்குமார், இளவரசன், உமாமகேஸ்வரி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை பெரியார் நகரில் உள்ள அரசு குடிசைமாற்று வாரியத்தில் 160-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து அலுவலகம் வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பெரியார் நகரில் உள்ள அரசு குடிசைமாற்று வாரியத்தில் 160-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 10 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை . நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், மேலும் நிரந்தர அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கோரி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து அலுவலகம் வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுவரை அரசு சார்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 22-வது நாளாக  நிலுவை ஊதியம் வழங்க கோரி அலுவலக வாயில் முன்பு ஊழியர்கள் அனைவரும் ஒற்றை காலில் நின்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கோரிக்கை–களை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். 

    • மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிராக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
    • புதுவை மின்துறையை 100 சதவிகிதம் தனியாருக்கு விற்பதாக கூறியுள்ளனர். இது வரை இந்தியாவில் எங்கும் இந்த திட்டம் அறிவிக்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த வாரம் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிராக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். மின்துறை ஊழியர்கள் தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை தள்ளி வைத்துள்ளனர். இதில் அரசின் நிலைப்பாடு என்ன? ஊழியர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள பிரச்சினை மட்டுமல்லாது, இது பொதுமக்களின் பிரச்சினையும் ஆகும்.

    புதுவை மின்துறையை 100 சதவிகிதம் தனியாருக்கு விற்பதாக கூறியுள்ளனர். இது வரை இந்தியாவில் எங்கும் இந்த திட்டம் அறிவிக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் தெளிவான நிலையை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.

    5 லட்சத்து 90 ஆயிரம் கட்டினால்தான் அதன் விளக்கத்தை பெற முடியும் என கூறுகிறார்கள். எனவே, எந்த நிபந்தனையோடு இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது என்பதனை மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும்.

    டென்டரில் மின்துறை இடங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1 க்கு கொடுத்துள்ளனர். இதனை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் முழுமையாக எதிர்க்கிறோம். துறை அமைச்சர், முதல்- அமைச்சர், கவர்னர் ஆகியோரின் துணையுடன் தான் இது நடைபெறுகிறது. அவர்களின் நண்பர்களுக்கு ஏற்றார்போல விதிகளை மாற்றி அமைத்துள்ளனர்.

    மதுபான தொழிற்சாலை, மின்துறை தனியார் மயமாக்கல் ஆகிய இரண்டிற்கும் அரசு மக்களுக்கு பதில் கூற வேண்டும். தனியார் மயத்தை உடனே நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கூட்டணி கட்சிகளோடு இணைந்து போராட்டம் நடத்த உள்ளோம்.

    ரங்கசாமி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் அரசு துறைகளுக்கு மூடுவிழா நடத்தி வருகிறார். இப்போது மின்துறையை மூடிவிட்டு தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    கொள்கை முடிவு எடுப்பது மட்டும் அரசின் கடமை அல்ல. அதற்கு மக்களிடம் விளக்கம் கொடுத்து, மக்களின் ஒத்துழைப்புடன் முடிவை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும், யுனைடெட் கிங்டம் மற்றும் இலங்கையில் உள்ள மூளாய் கூட்டுறவு மருத்துவமனைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியில் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் சுரேஷ் சாமுவேல், முதுநிலை கல்வியின் டீன் டாக்டர் மகாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணு பட், மருத்துவ கண் காணிப்பாளர் ஜெயசிங், துணைப்பதிவாளர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    சேலம் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் கீழ் இயங்கி வரும் புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும், யுனைடெட் கிங்டம் மற்றும் இலங்கையில் உள்ள மூளாய் கூட்டுறவு மருத்துவமனைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழக வேந்தர் கணேசன், முன்னிலையில் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி டீன் கொட்டூர், மூளாய் கூட்டுறவு மருத்துவமனை இயக்குனர் டாடர் சரவணமுத்து பூலோகநாகன் ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் சுரேஷ் சாமுவேல், முதுநிலை கல்வியின் டீன் டாக்டர் மகாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணு பட், மருத்துவ கண் காணிப்பாளர் ஜெயசிங், துணைப்பதிவாளர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் சுகாதார பாதுகாப்பு வழங்கல், சுகாதார பாதுகாப்பு கல்வியை நிறுவுதல், மேம்படுத்துதல், வெளிநாட்டு பயிற்சி திட்டங்களை வழங்கல், ஆசிரியர் பரிமாற்ற திட்டங்கள், சுகாதார பணி யாளர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொண்டு நிதி உதவி செய்யப்படும்.

    • திடீர் பிரேக் போட்டதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்தவர் பரிதாபமாக இறந்து போனார்.
    • சீனிவாசனை அங்கு இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுச்சேரி:

    திடீர் பிரேக் போட்டதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்தவர் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுவை ஜீவானந்தபுரம் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மேட்டுபாளையம் கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் திடீர் என பிரேக் போட்டதால் மோட்டடார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். சீனிவாசனை அங்கு இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த முன்னிட்டு புதுவை தமிழ் சங்கத்தில் சிறப்பு வில்லிசை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • எதிர்க்கட்சி தலைவர் சிவா வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த முன்னிட்டு புதுவை தமிழ் சங்கத்தில் சிறப்பு வில்லிசை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன் தாசு வரவேற்றார். துணைத் தலைவர் ஆதிகேசவன், துணைச்செயலாளர் அருள் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தொடக்க உரையாற்றி கவிதை வாசித்தார்.

    எதிர்க்கட்சி தலைவர் சிவா வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து எல்லாம் தந்த வள்ளல் என்ற தலைப்பில் வில்லிசை வேந்தர் பட்டாபிராமன் குழுவினரின் சிறப்பு வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    புலவர் துரை மாலிறையன் , போலீஸ் சூப்பிரண்டு வீர. பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பொருளாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

    விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், சீனு.கந்தகுமார்,, தினகரன், சிவேந்திரன், கணேசுபாபு மற்றும் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    ×