search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aruppadi Vedu Medical College"

    • கர்நாடகா கல்வியில் விருது என்ற நிகழச்சியை நடத்தி இந்த விருதை வழங்கியது.
    • இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன் ஆகியோர் வாழ்த்தினையும், பாராட்டினையும் துறையின் டீனுக்கு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம் ,சென்னை ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பல்வேறு செயல்பாடுகளின் சிறப்புகளை அங்கீகரிக்கும் வகையில் விருதுகளும் அவற்றுக்கு உறுதுணையாக சிறப்பாக பங்காற்றிய துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் .செந்தில்குமாருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது

    ஒய்.இ.எஸ். அறக்கட்டளை என்ற அரசு சாரா அமைப்பானது சமீபத்தில் பெங்களூருவில் கர்நாடகா கல்வியில் விருது என்ற நிகழச்சியை நடத்தி இந்த விருதை வழங்கியது.

    விருதுகளை பெற்றமைக்காக பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன் ஆகியோர் வாழ்த்தினையும், பாராட்டினையும் துறையின் டீனுக்கு தெரிவித்தனர்.

    துறையின் பேராசிரியர்களும் வாழ்த்தினை தெரிவித்தனர்.

    • ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
    • துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பெறலாம் என கல்லூரி முதல்வர் கொட்டூர் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், புதுவை மாநிலத்தில் முதன்முறை யாக மருத்துவ உயிர் தொழில்நுட்ப துறை துவங்கப்பட்டது.

    இதனை மணிப்பால் மங்களூரு பல்கலைக்கழத்தின் துணை வேந்தர். வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

    விநாயகா மிஷன் பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் சுதிர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஆறுபடை வீடு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கோட்டூர், பன்முகத்துறை முதல்வர் மகாலட்சுமி மருத்துவ ஆராய்ச்சி துறையின் இயக்குநர் விஷ்ணு பட், மருத்துவ ஆராய்ச்சி துறையின் துணை இயக்குநர் ரவிக்குமார் உள்பட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் மருத்துவ உயிர் தொழில்நுட்ப துறை பட்ட படிப்பிற்கு இந்த கல்வியாண்டு முதல் சேர்க்கை நடைபெற உள்ளது.

    முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மருத்துவத்துறையின் மேம்பட்ட உயிர் தொழில் நுட்பங்களை கற்பதின் மூலம் மருத்துவத்துறையில் ஆற்றல் மிகு நோய் கட்டுப்பாடுகள், முன்னேறிய மருந்துகளின் செயல்பாடுகள், நவீன நோய் நடுப்பூசி தயாரித்தல் மற்றும் விரைவான நோய்க் காரணிகளை கண்டறிதல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பெறலாம் என கல்லூரி முதல்வர் கொட்டூர் தெரிவித்துள்ளார்.

    • புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும், யுனைடெட் கிங்டம் மற்றும் இலங்கையில் உள்ள மூளாய் கூட்டுறவு மருத்துவமனைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியில் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் சுரேஷ் சாமுவேல், முதுநிலை கல்வியின் டீன் டாக்டர் மகாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணு பட், மருத்துவ கண் காணிப்பாளர் ஜெயசிங், துணைப்பதிவாளர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    சேலம் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் கீழ் இயங்கி வரும் புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும், யுனைடெட் கிங்டம் மற்றும் இலங்கையில் உள்ள மூளாய் கூட்டுறவு மருத்துவமனைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழக வேந்தர் கணேசன், முன்னிலையில் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி டீன் கொட்டூர், மூளாய் கூட்டுறவு மருத்துவமனை இயக்குனர் டாடர் சரவணமுத்து பூலோகநாகன் ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் சுரேஷ் சாமுவேல், முதுநிலை கல்வியின் டீன் டாக்டர் மகாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணு பட், மருத்துவ கண் காணிப்பாளர் ஜெயசிங், துணைப்பதிவாளர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் சுகாதார பாதுகாப்பு வழங்கல், சுகாதார பாதுகாப்பு கல்வியை நிறுவுதல், மேம்படுத்துதல், வெளிநாட்டு பயிற்சி திட்டங்களை வழங்கல், ஆசிரியர் பரிமாற்ற திட்டங்கள், சுகாதார பணி யாளர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொண்டு நிதி உதவி செய்யப்படும்.

    ×