search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மருத்துவ உயிர் தொழில்நுட்ப துறை தொடக்கம்
    X

    ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உயிர் தொழில்நுட்ப துறை தொடக்கம் நடைபெற்ற காட்சி.

    மருத்துவ உயிர் தொழில்நுட்ப துறை தொடக்கம்

    • ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
    • துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பெறலாம் என கல்லூரி முதல்வர் கொட்டூர் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், புதுவை மாநிலத்தில் முதன்முறை யாக மருத்துவ உயிர் தொழில்நுட்ப துறை துவங்கப்பட்டது.

    இதனை மணிப்பால் மங்களூரு பல்கலைக்கழத்தின் துணை வேந்தர். வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

    விநாயகா மிஷன் பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் சுதிர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஆறுபடை வீடு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கோட்டூர், பன்முகத்துறை முதல்வர் மகாலட்சுமி மருத்துவ ஆராய்ச்சி துறையின் இயக்குநர் விஷ்ணு பட், மருத்துவ ஆராய்ச்சி துறையின் துணை இயக்குநர் ரவிக்குமார் உள்பட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் மருத்துவ உயிர் தொழில்நுட்ப துறை பட்ட படிப்பிற்கு இந்த கல்வியாண்டு முதல் சேர்க்கை நடைபெற உள்ளது.

    முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மருத்துவத்துறையின் மேம்பட்ட உயிர் தொழில் நுட்பங்களை கற்பதின் மூலம் மருத்துவத்துறையில் ஆற்றல் மிகு நோய் கட்டுப்பாடுகள், முன்னேறிய மருந்துகளின் செயல்பாடுகள், நவீன நோய் நடுப்பூசி தயாரித்தல் மற்றும் விரைவான நோய்க் காரணிகளை கண்டறிதல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பெறலாம் என கல்லூரி முதல்வர் கொட்டூர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×