என் மலர்tooltip icon

    இந்தியா

    ரஷிய எண்ணெயை வாங்க கூடாது என மிரட்டும் டிரம்ப்: ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்த முக்கிய முடிவு
    X

    ரஷிய எண்ணெயை வாங்க கூடாது என மிரட்டும் டிரம்ப்: ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்த முக்கிய முடிவு

    • இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.
    • இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    இது உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார். இதையடுத்து இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.

    இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததாக டிரம்ப் தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசிய டிரம்ப், "இந்தியா இனி ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்கப் போவதில்லை. இந்த செயல்முறையை உடனடியாகச் செய்ய முடியாது. ஆனால் அது விரைவில் முடிவடையும். ஏற்கனவே இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிறுத்திவிட்டனர். அவர்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா சுமார் 38 சதவீத எண்ணையை வாங்கினார்கள். இனி அதைச் செய்ய மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ள நிலையில், எண்ணெய் வாங்கும் திட்டத்தை இந்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×