என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆபரேஷன் சிந்தூர்: யாரும் போரை விரும்பவில்லை, ஆனால்... உமர் அப்துல்லா
    X

    ஆபரேஷன் சிந்தூர்: யாரும் போரை விரும்பவில்லை, ஆனால்... உமர் அப்துல்லா

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 9 இலக்குகள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இரவு முழுவதும் துல்லியமாக தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "நாம் யாரும் போரை விரும்பவில்லை. காஷ்மீர் நிலைமை மீண்டும் மேம்பட வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அதற்கு முதலில் நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) தங்கள் துப்பாக்கிகளை கீழே போட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×