search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிரா: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பசவராஜ் பாட்டில் பாஜகவில் இணையவுள்ளார்
    X

    மகாராஷ்டிரா: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பசவராஜ் பாட்டில் பாஜகவில் இணையவுள்ளார்

    • அவுசா தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் பசவராஜ் பாட்டில்
    • மகாராஷ்டிராவில் இருக்கும் முக்கிய லிங்காயத்து தலைவர் இவர்

    காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பசவராஜ் பாட்டில் பாஜகவில் இணையவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் இன்று அவர் பாஜகவில் சேருவார் என்று கூறப்படுகிறது.

    அதற்கேற்ப இன்று காலை மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் வீட்டில் அவரை சந்தித்து பேசியுள்ளார் பசவராஜ் பாட்டில்.

    அவுசா தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் பசவராஜ் பாட்டில். மேலும் அம்மாநில அமைச்சராகவும் ஒருமுறை அவர் இருந்துள்ளார். குறிப்பாக மகாராஷ்டிராவில் இருக்கும் முக்கிய லிங்காயத்து தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

    அதே சமயம் இந்த தகவலை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து பேசிய மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல், பசவராஜ் பாட்டிலிடம் இருந்து எங்களுக்கு எந்த ராஜினாமா கடிதமும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×