search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகர ஜோதியாக காட்சியளித்த சுவாமி ஐயப்பன்- பக்தர்களின் சரண கோஷத்தால் அதிர்ந்த சபரிமலை
    X

    மகர ஜோதியாக காட்சியளித்த சுவாமி ஐயப்பன்- பக்தர்களின் சரண கோஷத்தால் அதிர்ந்த சபரிமலை

    • 18ம் படி ஏறி ஐயப்பன் சன்னிதானத்தை திருவாபரணம் அடைந்தது.
    • கோவிலில் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.

    புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரவிளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.

    மகரவிளக்கு பூஜையையொட்டி இன்று அதிகாலை 2.46 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகர சங்கராந்தி எனப்படும் மகர சங்ரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    மாலை 6.20 மணிக்கு பந்தளத்தில் இருந்து சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் திருவாபரணத்தை தந்திரி மகேஷ் மோகனரு, மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொண்டு அய்யப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்துகிறார்கள்.

    அதன்படி, 18ம் படி ஏறி ஐயப்பன் சன்னிதானத்தை திருவாபரணம் அடைந்தது.

    அந்த சமயத்தில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐயப்பன் பேரொளியாக ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு 3 முறை காட்சி தந்தார். அப்போது, அங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக பம்பை மற்றும் சன்னிதானத்தில் கூடுதலாக ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×