search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாஜனதா வெற்றி பெற்றால் சரத் பவார், உத்தவ் தாக்கரேயை ஜெயிலில் அடைக்கும்: கெஜ்ரிவால்
    X

    பாஜனதா வெற்றி பெற்றால் சரத் பவார், உத்தவ் தாக்கரேயை ஜெயிலில் அடைக்கும்: கெஜ்ரிவால்

    • இந்தியா கூட்டணியை ஆதரித்து மகாராஷ்டிராவில் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம்.
    • எனக்காக வாக்கு கேட்கவில்லை. இந்தியாவை காப்பாற்றுவதற்காக மன்றாடுகிறேன் என கெஜ்ரிவால் பிரசாரம்.

    இந்தியா கூட்டணியில் இடம் பிடித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் நடைபெற்ற தேர்தல் பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது கூறியதாவது:-

    நான் எனக்காக வாக்கு கேட்கவில்லை. நாட்டினை பாதுகாக்க எங்களிடம் மன்றாடுகிறேன். பா.ஜனதா வெற்றி பெறாது. ஜூன் 4-ந்தேதி வெற்றி பெற்றால் அது சுப்ரியா சுலே, சரத் பவார், உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேயை ஆகியோரை ஜெயிலுக்கும் அடைக்கும்.

    ஏழை மக்களுக்கு உயர்தர கல்வி வழங்க பணியாற்றியதால், சுகாதார சிஸ்டத்தை சிறந்ததாக்க முயற்சி மேற்கொண்டதால் பா.ஜனதா என்னை ஜெயிலில் அடைத்தது.

    இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    Next Story
    ×