என் மலர்
இந்தியா

கட்சி தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்திக்கு காங்கிரசில் ஒருமித்த ஆதரவு: அசோக் கெலாட்
- ராகுல் காந்தி தலைவர் ஆகாவிட்டால், கட்சிக்கு ஏமாற்றமாகி விடும்.
- 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல், மோடிக்கு எளிதாக இருக்காது.
ஜெய்ப்பூர் :
காங்கிரஸ் தலைவர் தேர்தல் செப்டம்பர் 20-ந்தேதிக்குள் நடத்தப்பட உள்ளது. ஆனால், தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்தநிலையில், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்திக்குத்தான் கட்சியில் ஒருமித்த ஆதரவு உள்ளது. தொண்டர்களின் உணர்வுகளை கருதி, அவர் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தலைவர் ஆகாவிட்டால், கட்சிக்கு ஏமாற்றமாகி விடும்.
பெரும்பாலானோர் வீட்டிலேயே உட்கார்ந்து விடுவார்கள். அது கட்சிக்கு பாதிப்பாகி விடும். நேரு குடும்பத்தை சேர்ந்த யாரும் கடந்த 32 ஆண்டுகளாக பிரதமராகவோ, மத்திய மந்திரியாகவோ, முதல்-மந்திரியாகவே ஆனது இல்லை. பிறகு ஏன் மோடி, அக்குடும்பத்தை பார்த்து பயப்படுகிறார்?
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல், மோடிக்கு எளிதாக இருக்காது. காங்கிரஸ்தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






