என் மலர்
இந்தியா

கொடுத்த வாக்கை காப்பாற்றும் கட்சி காங்கிரஸ்.. கர்நாடக பேரணியில் ராகுல் காந்தி பெருமிதம்!
- பாஜகவும் மோடியும் காங்கிரஸ் கொடுத்த வாக்கை காப்பாற்றாது என்று கூறினர்.
- வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் விஜயநகராவில் இன்று காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணியில் பேசிய ராகுல் காந்தி, "கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சியமைத்து 2 வருடங்கள் ஆகிறது. 5 முக்கிய வாக்குறுதியை நாங்கள் கொடுத்தோம். பாஜகவும் மோடியும் காங்கிரஸ் கொடுத்த வாக்கை காப்பாற்றாது என்று கூறினர்.
ஆனால் 1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.2000, ஒரு கோடி குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், 4 கோடி பேருக்கு 10 கிலோ இலவச உணவு தானியங்கள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் நிறைய சமூக மக்கள் சொந்த நிலம் இருந்தும் அதற்கான பத்திர உரிமம் இல்லாமல் இருப்பதாய் நான் அறிந்தேன். இதுகுறித்து கட்சி மூத்த நிர்வாகிகளிடம் பேசினேன். இன்று கர்நாடக அரசு 1 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களின் நிலத்துக்கான உரிமத்தை வழங்க உள்ளது.
அடுத்த 6 மாதங்களில் இது நடந்து முடியும். மேலும், கர்நாடகாவில் 2000 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 500 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் எல்லோருக்கும் அவரவர் நிலத்துக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்" என்றார்.






