search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மனைவியை கொன்று, உடலை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்த தொழில் அதிபர்
    X

    மனைவியை கொன்று, உடலை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்த தொழில் அதிபர்

    • அம்பிகாவுக்கு தனது கணவரின் நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
    • மகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடிந்தவுடன் பிரிந்து விடலாம் என்று கூறினேன்.

    ராஜ்கோட்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் குருபா ஜிரோலி. தொழில் அதிபர். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு 17 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

    இவர்கள் அம்பிகா டவுன்ஷிப் பகுதியில் உள்ள சாந்திலன் நிவாஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் அம்பிகாவுக்கு தனது கணவரின் நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த குருபா ஜிரோலி, மனைவியை கண்டித்தார். கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார். ஆனால் அம்பிகா, கள்ளக்காதலனுடன் செல்ல திட்டமிட்டார்.

    இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குருபா ஜிரோலி, இரும்பு பொருளால் மனைவியின் தலையில் சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.

    பின்னர் மனைவி உடலை வீடியோ எடுத்து அதை குடியிருப்பில் வசிப்பவர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்தார். அந்த வீடியோவில் குருபா ஜிரோலி கூறும்போது, மனைவியிடம் கள்ளக்காதலை கைவிட வலியுறுத்தினேன். மகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடிந்தவுடன் பிரிந்து விடலாம் என்று கூறினேன்.

    ஆனால் அதற்கு அவர் மறுத்து, காதலனுடன் ஓடிபோக திட்டமிட்டார். இதனால் அவரை கொலை செய்தேன். அவரை கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. அவரால் நான் கொடுமைகளை அனுபவித்தேன் என்று கூறினார். இதை பார்த்த குடியிருப்பு வாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குருபா ஜிரோலி போலீசில் சரண் அடைந்தார்.

    Next Story
    ×