search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: பா.ஜ.க. கண்டனம்
    X

    அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: பா.ஜ.க. கண்டனம்

    • மேற்கு வங்காளத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இந்தச் சம்பவத்துக்கு அம்மாநில பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் ரேஷன் திட்டத்தில் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில் மந்திரி ஜோதிபிரியா மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனைக்காக காரில் புறப்பட்டுச் சென்றனர். சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளான ஷாஜஹான் ஷேக், சங்கர் ஆத்யா வீடுகளில் சோதனை நடத்தச் சென்றது. அதிகாரிகள் குழுவுக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பாக சென்றது.

    தகவலறிந்து திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அதிகாரிகள் சோதனை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற வாகனத்தை தாக்கினர். இதில் அவர்களது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் சோதனை நடத்த முடியாமல் அங்கிருந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இச்சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு அம்மாநில பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் திரிணாமுல் காங்கிரசின் உள்ளூர் தலைவர்களால் ஆதரிக்கப்படும் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக இருக்கலாம். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தொடர்வது தேசத்துக்கு அச்சுறுத்தல் என தெரிவித்தார்.

    Next Story
    ×