என் மலர்tooltip icon

    இந்தியா

    இனிமேல் இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல் போராகவே கருதப்படும் - மத்திய அரசு தகவல்
    X

    இனிமேல் இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல் போராகவே கருதப்படும் - மத்திய அரசு தகவல்

    • தேசிய பாதுகாப்புக்குழு தலைவர் அஜித் தோவல் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
    • முப்படை தளபதிகள் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இது தொடர்பாக தேசிய பாதுகாப்புக்குழு தலைவர் அஜித் தோவல் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், முப்படை தளபதிகள் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த ஆலோசனையின் முடிவில், இனிமேல் இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல் போராகவே கருதப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், வருங்காலத்தில் தீவிரவாத தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×