என் மலர்
இந்தியா

ஆந்திரா: பள்ளிக்கு லேட்டாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர்
- பள்ளிக்கு தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை ஆசிரியர் சாய் பிரசன்னா வெட்டியுள்ளார்.
- இது குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்று ஆசிரியர் சாய் பிரசன்னா மாணவிகளை மிரட்டியுள்ளார்.
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டி தண்டனை கொடுத்த ஆசிரியரின் செயல் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் கேஜிபிவி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு காலையில் தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை ஆசிரியர் சாய் பிரசன்னா வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்று ஆசிரியர் சாய் பிரசன்னா மாணவிகளை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இது தொடர்பாக தெரிவித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாணவிகளிடம் ஒழுக்கத்தை வளர்க்கவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக ஆசிரியர் சாய் பிரசன்னா தனது செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
Next Story






