என் மலர்
இந்தியா

அவசர ஆலோசனை: பிரதமர் மோடி இல்லத்திற்கு விரைந்த அமித் ஷா, ராஜ்நாத் சிங்
- பஹல்காம் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
- அமித் ஷா சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் உளவுத்துறையின் தோல்விதான் தாக்குதலுக்கு காரணம் என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். அவர் பயணத்தை இடையில் முடித்துக் கொண்டு இன்று காலை அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார்.
இன்று அவரது இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரதமர் மோடி வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது மற்றும் பதிலடி கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
Next Story






