என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபாநாயகர் நோட்டீஸ் தொடர்பான வழக்கை 3 எம்எல்ஏக்கள் திரும்பப்பெறுவதாக தகவல்
Byமாலை மலர்26 July 2019 11:11 AM GMT (Updated: 26 July 2019 11:11 AM GMT)
சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தொடுத்த வழக்கை 3 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாபஸ் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி :
ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். அவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சபாநாயகரை சந்தித்து மனு கொடுத்தார்.
அந்த மனுவை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால் 3 எம்.எல்.ஏ.க் களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனை அடுத்து தங்கள மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தொடுத்த வழக்கை 3 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாபஸ் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ-க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வரும் 30-ம் தேதி திரும்ப பெற உள்ளனர்.
எம்எல்ஏ-க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆதரவு அளித்ததை அடுத்து வழக்கு வாபஸ் பெறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X