என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவுக்கு ரூ.88 லட்சம் ஹவாலா பணம் கடத்தல் - வாலிபர் கைது
Byமாலை மலர்11 May 2019 2:19 PM GMT (Updated: 11 May 2019 2:19 PM GMT)
கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்ற ரூ.88 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சொர்ணூர் டி.எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் திருத்தாலா இன்ஸ்பெக்டர் சித்தரஞ்சனுக்கு உத்தரவிட்டார்.
சித்தரஞ்சன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பட்டாம்பி பஸ் நிலையம் அருகே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் ரகசிய அறை அமைத்து அதில் ரூ.88 லட்சம் ஹவாலா பணம் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் ஹவாலா பணம் கடத்திவந்த பட்டாம்பியை சேர்ந்த தனஞ்செயன் (வயது 24) என்பதும், கோவை உக்கடத்தில் இருந்து மலப்புரத்துக்கு கடத்திச் செல்வதாகவும் கூறினார். இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சொர்ணூர் டி.எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் திருத்தாலா இன்ஸ்பெக்டர் சித்தரஞ்சனுக்கு உத்தரவிட்டார்.
சித்தரஞ்சன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பட்டாம்பி பஸ் நிலையம் அருகே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் ரகசிய அறை அமைத்து அதில் ரூ.88 லட்சம் ஹவாலா பணம் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் ஹவாலா பணம் கடத்திவந்த பட்டாம்பியை சேர்ந்த தனஞ்செயன் (வயது 24) என்பதும், கோவை உக்கடத்தில் இருந்து மலப்புரத்துக்கு கடத்திச் செல்வதாகவும் கூறினார். இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X