என் மலர்
செய்திகள்

டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து பிரகாஷ்ராஜ் பிரசாரம்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லியில் இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு பிரசாரம் செய்கிறார்.
புதுடெல்லி:
நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்திய பெங்களூரு பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இதைடொடர்ந்து, டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு பிரசாரம் செய்யப் போவதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லி மக்களுக்கு தேவையான நல்ல சுகாதாரம், கல்வி ஆகியவற்றை குறிக்கோளாக வைத்து இந்த தேர்தலை சந்திக்கும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளை ஆதரித்து ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். மதவாத அரசின் வெறுப்பு அரசியலை எதிர்த்து வெல்வதற்கு மாற்று சிந்தனை கொண்ட சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டார்.
இன்று மாலை வடகிழக்கு டெல்லி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரத்தை தொடங்கும் பிரகாஷ்ராஜ், நாளை புதுடெல்லி மற்றும் கிழக்கு டெல்லி தொகுதிகளில் பிரசாரத்தை தொடர்கிறார். #PrakashRaj #PrakashRajcampaign #DelhiAAP
Next Story






