என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதா திட்டங்கள் அனைத்தும் தோல்வி - குஷ்பு
Byமாலை மலர்9 April 2019 6:00 AM GMT (Updated: 9 April 2019 6:00 AM GMT)
பா.ஜனதா திட்டங்கள் அனைத்தும் தோல்வியை தழுவி உள்ளதால் அக்கட்சியை நம்ப முடியாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
ஐதராபாத்:
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறி உள்ள அனைத்தையும் நிச்சயமாக செய்து முடிக்கும். எதார்த்தமாக நடைமுறையில் செய்து முடிக்கக்கூடிய திட்டங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் சொல்லி உள்ளது.
இதற்கு முன்பும் காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் நேர்மையுடன் நடந்து கொள்கிறது. ஆனால் பா.ஜனதா மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது.
பா.ஜனதாவின் திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. பா.ஜனதா மேக் இண்டியா திட்டத்தை மிகவும் பிரபலப்படுத்தியது. ஆனால் அந்த திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது.
அதுபோல நிதி சீரமைப்புகளை பா.ஜனதா அறிவித்தது. இந்த திட்டங்களில் நிறைய முன்னேற்றம் வரும் என்று சொன்னது. ஆனால் நிதி சீரமைப்புகளும் தோல்வி அடைந்துள்ளன.
பா.ஜனதா சொன்னது எல்லாம் தோல்வியை தழுவி உள்ளது. எனவே பா.ஜனதாவை நம்ப முடியாது.
இவ்வாறு குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சேவால்லா பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொண்ட விஸ்வேஸ்வர ராவ் ரெட்டியை ஆதரித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறி உள்ள அனைத்தையும் நிச்சயமாக செய்து முடிக்கும். எதார்த்தமாக நடைமுறையில் செய்து முடிக்கக்கூடிய திட்டங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் சொல்லி உள்ளது.
இதற்கு முன்பும் காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் நேர்மையுடன் நடந்து கொள்கிறது. ஆனால் பா.ஜனதா மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது.
பா.ஜனதாவின் திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. பா.ஜனதா மேக் இண்டியா திட்டத்தை மிகவும் பிரபலப்படுத்தியது. ஆனால் அந்த திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது.
அதுபோல நிதி சீரமைப்புகளை பா.ஜனதா அறிவித்தது. இந்த திட்டங்களில் நிறைய முன்னேற்றம் வரும் என்று சொன்னது. ஆனால் நிதி சீரமைப்புகளும் தோல்வி அடைந்துள்ளன.
பா.ஜனதா சொன்னது எல்லாம் தோல்வியை தழுவி உள்ளது. எனவே பா.ஜனதாவை நம்ப முடியாது.
இவ்வாறு குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X