என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைவர்களின் செக்ஸ், ஊழல், மோசடியை வெளிப்படுத்தவே போட்டியிடுகிறேன்- சரிதா நாயர்
    X

    காங்கிரஸ் தலைவர்களின் செக்ஸ், ஊழல், மோசடியை வெளிப்படுத்தவே போட்டியிடுகிறேன்- சரிதா நாயர்

    காங்கிரஸ் தலைவர்களின் மோசடி, ஊழல், செக்ஸ் பிரச்சனைகளை வெளிப்படுத்தவே போட்டியிடுவதாக சரிதா நாயர் கூறியுள்ளார். #Loksabhaelections2019 #SarithaNair
    வயநாடு:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக நடிகை சரிதா நாயர் களம் இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து சரிதா நாயர் அளித்துள்ள பேட்டியில் ‘நான் வயநாடு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட இருக்கிறேன். வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ராகுலை எதிர்த்துப் போட்டியிடவில்லை. அவரை எதிர்த்து போட்டியிடுவதால் பொதுமக்களிடம் பிரபலம் ஆக வாய்ப்பிருக்கிறது.

    அதன்மூலம் கேரள காங்கிரஸ் தலைவர்களின் மோசடி, ஊழல், செக்ஸ் பிரச்சனைகளை அம்பலப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறார்.

    ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரத தர்ம ஜன சேனா அமைப்பின் தலைவர் துஷார் வெள்ளப்பள்ளியும், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.பி.சுனீரும் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் சரிதா நாயரும் இணைந்திருப்பதால், வயநாடு தொகுதி இந்திய அளவில் கவனிக்கப்பட வேண்டிய தொகுதியாக மாறியிருக்கிறது.

    ஏற்கெனவே செக்ஸ் புகாரில் சிக்கிய ஹிபி ஈடனை, எர்ணாகுளம் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரிதா நாயர், அவரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதால் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். #Loksabhaelections2019 #SarithaNair
    Next Story
    ×