search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் - ராகுல் காந்தி உறுதி
    X

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் - ராகுல் காந்தி உறுதி

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #ParliamentElection #Congress #RahulGandhi #FisheriesMinistry
    பனாஜி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தேதிகளில் அறிவிக்கப்பட உள்ளதால், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒவ்வொரு மாநிலமாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கோவா சென்றார். அங்கு பல்வேறு அமைப்பினர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:



    மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். தற்போது வேளாண் துறையின் கீழ் உள்ள மூன்று துறைகளில் ஒன்றாக மீன்வளத்துறை உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகமாக மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். #ParliamentElection #Congress #RahulGandhi #FisheriesMinistry
    Next Story
    ×