search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு சில பணக்காரர்களுக்காக மட்டுமே உழைக்கிறது பாஜக - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
    X

    ஒரு சில பணக்காரர்களுக்காக மட்டுமே உழைக்கிறது பாஜக - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

    மத்திய பிரதேசத்தில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகுல்காந்தி, ஒரு சில பணக்காரர்களுக்காக மட்டுமே பாஜக உழைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். #MadhyaPradesh #RahulGandhi #BJP
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 28-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பான பிரச்சாரங்களையும், தேர்தல் வேலைகளையும் காங்கிரஸ் மற்றும் பாஜக துவங்கிவிட்டன.

    இன்று ஆதிவாசி எக்தா பரிஷத் என்ற அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,  ஆதிவாசிகளுக்கான சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். மேலும், தான் 2004-ம் ஆண்டு முதல் அரசியலில் இருப்பதாகவும், எப்போதாவது ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவேன் என பொய் வாக்குறுதி அளித்தது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.



    2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பீடு நடவடிக்கை மூலம் கருப்பு பணங்கள் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டதாகவும், யாரும் கைதும் செய்யப்படவில்லை யாரும் 15 லட்சம் பணமும் பெறவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், நீரவ் மோடி நமது பணமான 35 ஆயிரம் கோடி ரூபாயை திருடிவிட்டு வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும், விஜய் மல்லையாவோ 10 ஆயிரம் கோடியை திருடிவிட்டு நிதிமந்திரியிடம் சொல்லிவிட்டே வெளிநாடு சென்று ஒளிந்துகொண்டதாகவும் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    மேலும், மத்திய பாஜக அரசு, பணக்காரர்களுக்காக மட்டுமே பணியாற்றுவதாகவும், அப்படியே இருந்தாலும் கூட, ஏழைகளுக்கும், பழங்குடியின மக்களுக்காகவும் சற்று உழைக்குமாறும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். #MadhyaPradesh #RahulGandhi #BJP
    Next Story
    ×