என் மலர்
செய்திகள்

மகாராஷ்டிராவில் பிரம்மாண்ட பேனர் விழுந்ததில் இருவர் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெயில்வே நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த பெரிய பேனர் சாலையில் விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Maharashtra
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜி நகர் பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்துக்கு அருகே மிகப்பெரிய விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இன்று அதனை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது தீடீரென அந்த பேனர் அருகே இருந்த சாலையில் விழுந்தது.
சாலையில் சென்றுகொண்டு இருந்த வாகனங்கள் மீது விழுந்த இந்த பேனரால், 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #Maharashtra
மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜி நகர் பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்துக்கு அருகே மிகப்பெரிய விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இன்று அதனை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது தீடீரென அந்த பேனர் அருகே இருந்த சாலையில் விழுந்தது.
சாலையில் சென்றுகொண்டு இருந்த வாகனங்கள் மீது விழுந்த இந்த பேனரால், 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #Maharashtra
Next Story






