search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது - ஆதார் ஆணையம் உத்தரவு
    X

    ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது - ஆதார் ஆணையம் உத்தரவு

    ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது என பள்ளிகளுக்கு ‘ஆதார்’ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Aadhaar #UIDAI
    புதுடெல்லி:

    அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ‘ஆதார்’ அடையாள அட்டை ஆணையம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக, சில பள்ளிகள் மாணவர்களை சேர்க்க மறுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆதார் எண் இல்லாததற்காக, எந்த குழந்தையையும் பள்ளியில் சேர்க்க மறுக்கக்கூடாது என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    அப்படி சேர்க்க மறுப்பது செல்லாது. சட்டப்படி அனுமதிக்கத்தக்கதும் அல்ல. ஆதார் எண் ஒதுக்கப்படும்வரை, வேறு அடையாள அட்டைகள் மூலம் அம்மாணவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மேலும், பள்ளியிலேயே ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Aadhaar #UIDAI
    Next Story
    ×